ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த கடல்நீர்; வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்! - போராட்டம் நடத்திய மக்கள்

கன்னியாகுமரி: அழிகால் கடல் பகுதிகளில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டம்
author img

By

Published : Aug 23, 2019, 11:33 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் இன்று பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈத்தாமொழி அருகே உள்ள அழிகால் கடற்கரை மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தூண்டில் வளைவு அமைத்துத் தரக்கூறி மக்கள் போராட்டம்

இதனால் மக்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியேறினர். ஒரு மாதத்திற்கு முன்பு இதுபோல், கடல்நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தூண்டில் வளைவு அமைத்துத் தரவேண்டும் என ஊர் மக்கள் அரசுக்குக் கோரிக்கைவைத்துள்ளனர்.

ஆனால், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில், மீண்டும் ஏற்பட்டிருக்கும் கடல் சீற்றத்தால் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, நாகர்கோவில் - குளச்சல் செல்லும் பிரதான சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் இன்று பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈத்தாமொழி அருகே உள்ள அழிகால் கடற்கரை மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தூண்டில் வளைவு அமைத்துத் தரக்கூறி மக்கள் போராட்டம்

இதனால் மக்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியேறினர். ஒரு மாதத்திற்கு முன்பு இதுபோல், கடல்நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தூண்டில் வளைவு அமைத்துத் தரவேண்டும் என ஊர் மக்கள் அரசுக்குக் கோரிக்கைவைத்துள்ளனர்.

ஆனால், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில், மீண்டும் ஏற்பட்டிருக்கும் கடல் சீற்றத்தால் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, நாகர்கோவில் - குளச்சல் செல்லும் பிரதான சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் அழிகால் கடல் பகுதிகளில் பலத்த கடல் சீற்றம் - கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. தூண்டில் வளைவு அமைத்து தராத தமிழக அரசை கண்டித்து கடற்கரை கிராம மக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு பாதிப்பு.Body:tn_knk_07_searough_public_protest_script_TN10005

கன்னியாகுமரி, எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் அழிகால் கடல் பகுதிகளில் பலத்த கடல் சீற்றம் - கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. தூண்டில் வளைவு அமைத்து தராத தமிழக அரசை கண்டித்து கடற்கரை கிராம மக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு பாதிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் அரபி கடல் பகுதிகளில் இன்று பலந்த கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஈத்தாமொழி அருகே உள்ள அழிகால் கடற்கரை கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளில் புகுந்தது. இதனால் மீனவ மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். ஏற்கனவே ஒரு மாதம் முன்பு இது போன்று கடல் நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. தூண்டில் வளைவு அமைத்து தர ஊர் மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று ஏற்பட்ட கடல் சீற்றத்தில் மீண்டும் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. வீடுகளை விட்டு வெளிஏறிய மக்கள் நாகர்கோவில் - குளச்சல் செல்லும் பிரதான சாலையில் கல்லுகட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்கரை பெண்கள் நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ சுரேஷ்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.