ETV Bharat / state

குடியரசுத் தலைவர் குமரி மாணவர்களுடன் கலந்துரையாடல்! - president visits vivekananda rock memorial

நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 50ஆவது பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க கன்னியாகுமரி வரும் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

president-ramnath-kovind-
டியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
author img

By

Published : Dec 24, 2019, 8:00 AM IST

இதுகுறித்து விவேகானந்தா கேந்திரா நிர்வாக செயலாளர் ஹனுமந்த்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது :-

"சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு (2020) செப்டம்பர் 2ஆம் தேதிவரை கொண்டாட விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் முடிவு செய்து, பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக நாளை (25ஆம் தேதி) கன்னியாகுமரிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின்னர் பூம்புகார் படகுத்துறையில் இருந்து தனிப்படகு மூலம் கடலில் உள்ள சுவாமி விவேகானந்தா கேந்திரா நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு தியான மண்டபம், ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

இரண்டாம் நாளான 26ஆம்தேதி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் காலை 9.30 மணிக்கு விவேகானந்தா கேந்திராவிற்கு வரும் குடியரசுத் தலைவர், விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கபடுகிறது. இதைத் தொடர்ந்து பாரத மாதா தரிசனம், ராமாயண தரிசன கண்காட்சி கூடத்திற்கு செல்கிறார். அதையடுத்து அருகிலுள்ள ஏக்நாத் அரங்கத்தில் விவேகானந்த கேந்திரா பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 60 மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், ஆயுட்கால உறுப்பினர்கள், எம்.பி.க்கள் ஆகியோருடன் விவேகானந்தரின் கன்னியாகுமரி வருகை, பாறை நினைவாலையம் ஆகியவை பற்றி அரை மணிநேரம் கலந்துரையாடல் நடக்கிறது" எனக் கூறினார்.

கேந்திரா நிர்வாக செயலாளர் ஹனுமந்த்ராவ் நிருபர்கள் சந்திப்பு

இதையும் படியுங்க:

பெண்கள் அதிகமாக பட்டம் பெற்றிருப்பது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கிறது: ராம்நாத் கோவிந்த்!

இதுகுறித்து விவேகானந்தா கேந்திரா நிர்வாக செயலாளர் ஹனுமந்த்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது :-

"சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு (2020) செப்டம்பர் 2ஆம் தேதிவரை கொண்டாட விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் முடிவு செய்து, பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக நாளை (25ஆம் தேதி) கன்னியாகுமரிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின்னர் பூம்புகார் படகுத்துறையில் இருந்து தனிப்படகு மூலம் கடலில் உள்ள சுவாமி விவேகானந்தா கேந்திரா நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு தியான மண்டபம், ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

இரண்டாம் நாளான 26ஆம்தேதி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் காலை 9.30 மணிக்கு விவேகானந்தா கேந்திராவிற்கு வரும் குடியரசுத் தலைவர், விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கபடுகிறது. இதைத் தொடர்ந்து பாரத மாதா தரிசனம், ராமாயண தரிசன கண்காட்சி கூடத்திற்கு செல்கிறார். அதையடுத்து அருகிலுள்ள ஏக்நாத் அரங்கத்தில் விவேகானந்த கேந்திரா பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 60 மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், ஆயுட்கால உறுப்பினர்கள், எம்.பி.க்கள் ஆகியோருடன் விவேகானந்தரின் கன்னியாகுமரி வருகை, பாறை நினைவாலையம் ஆகியவை பற்றி அரை மணிநேரம் கலந்துரையாடல் நடக்கிறது" எனக் கூறினார்.

கேந்திரா நிர்வாக செயலாளர் ஹனுமந்த்ராவ் நிருபர்கள் சந்திப்பு

இதையும் படியுங்க:

பெண்கள் அதிகமாக பட்டம் பெற்றிருப்பது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கிறது: ராம்நாத் கோவிந்த்!

Intro:சுவாமிவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 50வது பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க கன்னியாகுமரி வரும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பள்ளிமாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.Body:tn_knk_03_kendra_staff_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

சுவாமிவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 50வது பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க கன்னியாகுமரி வரும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பள்ளிமாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதுகுறித்து
விவேகானந்தா கேந்திரா நிர்வாகசெயலாளர் ஹனுமந்த்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது :-
சுவாமிவிவேகானந்தர் கடந்த 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம்தேதி முதல் மூன்றுநாட்கள் கடலில் உள்ள பாறையில் தவமிருந்தார்.அதன்நினைவாக விவேகானந்தர் நினைவுமண்டபம் கட்டப்பட்டு கடந்த 1970-ம்ஆண்டு செப்டம்பர் 2-ம்தேதி திறக்கப்பட்டது.இந்த நினைவுமண்டபத்தின் 50-ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம்தேதி தொடங்கி அடுத்தாண்டு (2020) செப்டம்பர் 2 வரை ஓராண்டு கொண்டாட விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் முடிவு செய்து பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடுசெய்துள்ளது. இதற்காக நாளை மறுநாள் ,(25 ம் தேதி) கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.பின்னர் பூம்புகார் படகுதுறையில் இருந்து தனிபடகுமூலம் கடலில் உள்ள சுவாமி விவேகானந்தா கேந்திரா நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு தியானமண்டபம்,ஸ்ரீபாதமண்டபம்,சபாமண்டபம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.பின்னர் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
26-ம்தேதி : இரண்டாம் நாளான 26-ம்தேதி கன்னியாகுமரி அரசுவிருந்தினர் மாளிகையில் இருந்து கார்மூலம் காலை 9.30 மணிக்கு விவேகானந்தகேந்திராவிற்கு வரும் ஜனாதிபதிக்கு விவேகானந்தகேந்திரா நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கபடுகிறது.பின்னர் பாரதமாதாதரிசனம் மற்றும் ராமாயணதரிசனகண்காட்சிகூடத்திற்கு செல்கிறார்.பின்னர் அருகிலுள்ள ஏக்நாத் அரங்கத்தில் விவேகானந்தகேந்திரா பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பில் படிக்கும் 60 மாணவ,மாணவிகள்,ஆசிரியர்கள்,ஆயுட்கால உறுப்பினர்கள்,எம்.பி.,'க்கள் ஆகியோருடன் விவேகானந்தரின் கன்னியாகுமரிவருகை,பாறைநினைவாலையம் ஆகியவை பற்றி அரைமணிநேரம் கலந்துரையாடல் நடக்கிறது.10 மணிக்கு புறப்பட்டு செல்கிறார்
இவ்வாறு அவர் கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.