ETV Bharat / state

ஃபேஸ்புக்கில் ஆபாச பதிவு; கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது!

author img

By

Published : Oct 6, 2019, 11:01 AM IST

கன்னியாகுமரி: களியக்காவிளை அருகே நவராத்திரி விழா குறித்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை கைது செய்த காவல் துறையினர்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன் (35). கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான இவர் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை ஆகியவை குறித்து முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை கைது செய்த காவல் துறையினர்
மேலும் தனியார் நகைக் கடையில் கொள்ளையடித்த நபருக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சால்வை போடுவது போன்ற மார்பிங் செய்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பாஜக நிர்வாகிகள் களியக்காவிளை காவல் நிலையத்தில் ஜெயன் மீது புகாரளித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் ஜெயனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் இச்சம்பவம் வைரலாகி வருவதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன் (35). கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான இவர் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை ஆகியவை குறித்து முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை கைது செய்த காவல் துறையினர்
மேலும் தனியார் நகைக் கடையில் கொள்ளையடித்த நபருக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சால்வை போடுவது போன்ற மார்பிங் செய்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பாஜக நிர்வாகிகள் களியக்காவிளை காவல் நிலையத்தில் ஜெயன் மீது புகாரளித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் ஜெயனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் இச்சம்பவம் வைரலாகி வருவதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Intro:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே நவராத்திரி விழா குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். Body:tn_knk_04_cybercrime_arrested_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே நவராத்திரி விழா குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ஜெயன், 35. படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான இவர் நவராத்திரி விழா மற்றும் சரஸ்வதி தேவி குறித்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, சரஸ்வதி தேவியின் இரண்டு புறமும் செருப்பு வைத்து வழிபடுவது போன்று படம் வெளியிட்டுள்ளார்.
மேலும் தனியார் நகை கடையை கொள்ளையடித்த நபருக்கு, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சால்வை போடுவது போன்று மார்பிங் செய்த படத்தை பரப்பியதாக, பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும்பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயனை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில், இச்சம்பவம் வைரலாகி வருவதால், அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.