தமிழ்நாடு சட்டப்பேரவை விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும், தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன.
தேர்தல் ஆணையம் மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமனம் செய்து, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் , வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய பணிகளை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக, மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதையும் படிங்க:அரசியல் ஸ்டன்ட்களில் திமுக ஈடுபடுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்