ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Oct 7, 2020, 9:28 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை கேண்டினில் பணிபுரிந்த பணியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலியான சிவா
பலியான சிவா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (38). இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் டீக்கடையில் வேலை பார்த்துவருகிறார். அவரது மனைவி சத்துணவு ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

அவர் வழக்கம்போல் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர் நாகர்கோவில் பருத்திவிளை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் முன்பு சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சிவா சம்பவ இடத்திலேயே பலியானார். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (38). இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் டீக்கடையில் வேலை பார்த்துவருகிறார். அவரது மனைவி சத்துணவு ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

அவர் வழக்கம்போல் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர் நாகர்கோவில் பருத்திவிளை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் முன்பு சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சிவா சம்பவ இடத்திலேயே பலியானார். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.