ETV Bharat / state

மின்மோட்டாரை இயக்க முற்பட்ட முதியவர் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 26, 2021, 5:48 PM IST

காஞ்சிபுரம்: ஓரிக்கைப் பகுதியில் மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின் மோட்டாரை இயக்க முற்பட்ட முதியவர் உயிரிழப்பு!
மின் மோட்டாரை இயக்க முற்பட்ட முதியவர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை - அண்ணா குடியிருப்புப்பகுதியில் வசிப்பவர், சுண்டல் வியாபாரியான ஏழுமலை. 70 வயதான இவர் தனது வீட்டில் உள்ள தண்ணீர் இறைப்பதற்கான மின் மோட்டாரை இயக்க முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து ஏழுமலையை பரிசோதித்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு!

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை - அண்ணா குடியிருப்புப்பகுதியில் வசிப்பவர், சுண்டல் வியாபாரியான ஏழுமலை. 70 வயதான இவர் தனது வீட்டில் உள்ள தண்ணீர் இறைப்பதற்கான மின் மோட்டாரை இயக்க முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து ஏழுமலையை பரிசோதித்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.