ETV Bharat / state

"மூடிய டாஸ்மாக்கை திறப்பதா??"- நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு - மதுபானக்கடை

கன்னியாகுமரி: மூடிய மதுபானக்கடையை திறக்க முயன்றதால், 'நாம் தமிழர் கட்சி' சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மூடிய டாஸ்மாக்கை திறப்பதா?? நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு!
author img

By

Published : Aug 15, 2019, 11:57 PM IST

தமிழ்நாடு அரசால், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு வந்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு மதுபானக்கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை மீண்டும் திறக்க டாஸ்மாக் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது.

மூடிய டாஸ்மாக்கை திறப்பதா?? நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு!

இதைத்தொடர்ந்து, ஆற்றூர் பகுதியில் மதுபானகடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் வீடு வீடாக சென்று 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் கையெழுத்தை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

தமிழ்நாடு அரசால், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு வந்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு மதுபானக்கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை மீண்டும் திறக்க டாஸ்மாக் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது.

மூடிய டாஸ்மாக்கை திறப்பதா?? நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு!

இதைத்தொடர்ந்து, ஆற்றூர் பகுதியில் மதுபானகடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் வீடு வீடாக சென்று 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் கையெழுத்தை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Body:கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏறக்கனவே இரண்டு மதுக்கடைகள் செயல்பட்டு வந்தது. மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு வந்ததை தொடர்ந்து இந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் இந்த பகுதியில் கிராம சாலையில் மதுக்கடை திறக்க டாஸ்மாக் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கேட்டும், ஆற்றூர் பகுதியில் மது பானகடையை திறக்க கூடாது என வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
மேலும் இதை தொடர்ந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.