ETV Bharat / state

'விபத்தில்லா கன்னியாகுமரி 2020' - no accident kanyakumari 2020 awerness

கன்னியாகுமரி: போக்குவரத்து காவல் துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே விபத்தில்லா கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.

கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்
கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்
author img

By

Published : Jan 7, 2020, 2:57 PM IST

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே போக்குவரத்துக் காவல் துறை சார்பில் விபத்தில்லா கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. விழிப்புணர்வு பரப்புரையின்போது போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் காவலர்கள் கன்னியாகுமரி பகுதிகளிலுள்ள புனித அந்தோணியார் பள்ளி, விவேகானந்தா கேந்திரா பள்ளி, அமிர்தா பள்ளி, ஆகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

மேலும், 18 வயது நிரம்பாத மாணவ, மாணவிகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்டிவருவதை நிர்வாகத்தினர் கண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வாகனம் ஓட்டிவந்தால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவலர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை

இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை பள்ளி, கல்லூரிகள் முன்பு போக்குவரத்துக் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே போக்குவரத்துக் காவல் துறை சார்பில் விபத்தில்லா கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. விழிப்புணர்வு பரப்புரையின்போது போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் காவலர்கள் கன்னியாகுமரி பகுதிகளிலுள்ள புனித அந்தோணியார் பள்ளி, விவேகானந்தா கேந்திரா பள்ளி, அமிர்தா பள்ளி, ஆகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

மேலும், 18 வயது நிரம்பாத மாணவ, மாணவிகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்டிவருவதை நிர்வாகத்தினர் கண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வாகனம் ஓட்டிவந்தால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவலர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை

இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை பள்ளி, கல்லூரிகள் முன்பு போக்குவரத்துக் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

Intro:கன்னியாகுமரி உட்கோட்ட போக்குவரத்து காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளிடையே விபதில்லா கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.Body:tn_knk_02_traffic_awareness_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி உட்கோட்ட போக்குவரத்து காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளிடையே விபதில்லா கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே கன்னியாகுமரி உட்கோட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் விபதில்லா குமரி 2020 என்ற தலைப்பில் விழிபுணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதனையொட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் போலீசார் கன்னியாகுமரி பகுதிகளிலுள்ள புனித அந்தோணியார் பள்ளி, விவேகானந்தா கேந்திரா பள்ளி, அமிர்தா பள்ளி , ஆகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னீக் கல்லூரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்தும் விபத்துகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது 18 வயது நிரம்பாத மாணவ மாணவிகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது, பள்ளிகளுக்கு வாகனம் ஒட்டி வருவது சட்டப்படி குற்றமாகும், மாணவ மாணவிகள் பள்ளிக்கு 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனம் ஒட்டி வருவதை நிர்வாகத்தினர் கண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவ மாணவிகள் பள்ளிக்கு வாகனம் ஒட்டி வந்தால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எடுத்துரைத்து இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டி போர்டுகள் பள்ளி கல்லூரிகள் முன்பு போக்குவரத்து போலிஸாரின் சார்பில் வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.