ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு: என்.ஐ.ஏ. அலுவலர்கள் குற்றவாளிகளிடம் விசாரணை

author img

By

Published : Jan 26, 2020, 9:14 PM IST

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரிடம் இன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்தினர்.

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளை விசாரித்த என்ஐஏ அலுவலர்கள்
வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளை விசாரித்த என்ஐஏ அலுவலர்கள்

குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8ஆம் தேதி சோதனைச்சாவடியில் காவலிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலைசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். தற்போது இவர்கள் காவல் துறையினரின் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இவர்கள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் இவர்களிடமிருந்த கைப்பை நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள பள்ளி வாசலிலிருந்து மீட்கப்பட்டது. இருவரையும் கொலை நடந்த பகுதிக்கு அழைத்துச்சென்று கொலை செய்தது எப்படி என நடித்துக் காட்டும் நிகழ்வும் நடந்தது.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், இவர்களது சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு முகமை துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் நாகர்கோவிலில் உள்ள நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தவ்பீக், அப்துல் சமீம் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். கேரள மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் அனிஷுடன் இருந்தார்.

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளை விசாரித்த என்ஐஏ அலுவலர்கள்

இந்த விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு இருக்கும் பல தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு மொத்தமும் தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் காவல் துறையினரின் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.

குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8ஆம் தேதி சோதனைச்சாவடியில் காவலிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலைசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். தற்போது இவர்கள் காவல் துறையினரின் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இவர்கள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் இவர்களிடமிருந்த கைப்பை நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள பள்ளி வாசலிலிருந்து மீட்கப்பட்டது. இருவரையும் கொலை நடந்த பகுதிக்கு அழைத்துச்சென்று கொலை செய்தது எப்படி என நடித்துக் காட்டும் நிகழ்வும் நடந்தது.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், இவர்களது சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு முகமை துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் நாகர்கோவிலில் உள்ள நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தவ்பீக், அப்துல் சமீம் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். கேரள மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் அனிஷுடன் இருந்தார்.

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளை விசாரித்த என்ஐஏ அலுவலர்கள்

இந்த விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு இருக்கும் பல தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு மொத்தமும் தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் காவல் துறையினரின் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோரிடம் இன்று தேசிய புலனாய்வு முகமை (NIA )அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
Body:குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8 ம் தேதி சோதனைச்சாவடியில் காவலில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளான அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது இவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தியை போலீசார் மீட்டனர். மேலும் இவர்களிடம் இருந்த கைப்பை நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள பள்ளி வாசலில் இருந்து மீட்கப்பட்டது. இருவரையும் கொலை நடந்த பகுதிக்கு அழைத்துச்சென்று கொலை செய்தது எப்படி என நடித்துக் காட்டும் நிகழ்வும் நடந்தது.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், இவர்களது சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமை கையிலெடுக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு முகமை, டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நாகர்கோவிலில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் வந்தனர். பின்னர் அவர்கள் தவ்பீக் மற்றும் அப்துல் சமீம் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். கேரள மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அனிஷ் உடன் இருந்தார்.

இந்த விசாரணையில் தீவிரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு இருக்கும் பல தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை ஏற்று கொண்டு விசாரணை மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக போலீசார் மத்தியில் பரவலாக கூறப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.