ETV Bharat / state

பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலை - பொதுமக்கள் அவதி! - உடைந்த தேசிய நெடுஞ்சாலை

கன்னியாகுமரி: கனமழை காரணமாக வழுக்கம்பாறை - அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்துள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

road damage
author img

By

Published : Oct 30, 2019, 5:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழுக்கம்பாறை - அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இந்த வழியாகத்தான் பொருள்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக ஜேம்ஸ்டவுன் என்ற இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் மீதமுள்ள ஐந்து அடி இடைவெளியில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒன்றன் பின் ஒன்றாகச் செல்கின்றன.

உடைந்த சாலையால் போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழுக்கம்பாறை - அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இந்த வழியாகத்தான் பொருள்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக ஜேம்ஸ்டவுன் என்ற இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் மீதமுள்ள ஐந்து அடி இடைவெளியில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒன்றன் பின் ஒன்றாகச் செல்கின்றன.

உடைந்த சாலையால் போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் வழுக்கம்பாறை-அஞ்சுகிராமம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Body: குமரி மாவட்டம் வழுக்கம்பாறை-அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்த வழியாக கன்னியாகுமரி, திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பொருள்கள் இந்த வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. ஏராளமான பள்ளி கல்லூரிகளும் இந்த சாலை செல்லும் வழியில் உள்ளன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வழுக்கம்பாறை-அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் ஜேம்ஸ்டவுன் என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டது.
இதனால், சாலையில் மீதமிருந்த சுமார் 5 அடி இடைவெளியில் இரண்டு புறமும் இருந்து வாகனங்கள் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.