ETV Bharat / state

மகா சிவராத்திரி: சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்

author img

By

Published : Mar 11, 2021, 6:35 AM IST

கன்னியாகுமரி: மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் சிவாலய ஓட்டத்தில் தமிழ்நாடு - கேரளாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

maha
maha

நாட்டில் எங்கும் நிகழாத வகையில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 110 கிலோமீட்டர் தூரம் உள்ள 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடந்தே சென்று வழிபாடு செய்யும் சிவாலய ஓட்டம் நேற்று (மார்ச் 10) மாலை தொடங்கியது.

அதன்படி முதல் கோயிலான முன்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து கோவிந்தா- கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் நடந்தும், ஓடியும் கடந்தனர். இந்த ஓட்டத்தை நாளை (மார்ச் 12) அதிகாலை திருநட்டாலம் சங்கர நாராயணர் கோயிலில் நிறைவு செய்கின்றனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு - கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று (மார்ச் 11) மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எங்கும் நிகழாத வகையில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 110 கிலோமீட்டர் தூரம் உள்ள 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடந்தே சென்று வழிபாடு செய்யும் சிவாலய ஓட்டம் நேற்று (மார்ச் 10) மாலை தொடங்கியது.

அதன்படி முதல் கோயிலான முன்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து கோவிந்தா- கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் நடந்தும், ஓடியும் கடந்தனர். இந்த ஓட்டத்தை நாளை (மார்ச் 12) அதிகாலை திருநட்டாலம் சங்கர நாராயணர் கோயிலில் நிறைவு செய்கின்றனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு - கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று (மார்ச் 11) மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.