ETV Bharat / state

நடுக்கடலில் நெஞ்சு வலியால் குமரி மீனவர் மரணம்

author img

By

Published : Dec 9, 2020, 11:28 AM IST

கன்னியாகுமரி: கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இது குறித்து கன்னியாகுமரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நடுக்கடலில் நெஞ்சுவலியால் குமரி மீனவர் மரணம்
நடுக்கடலில் நெஞ்சுவலியால் குமரி மீனவர் மரணம்

கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மீனவர் ததேயூஸ் (43). இவர் உள்பட ஐந்து பேர் ஜோன்ஸ் என்பவருக்குச் சொந்தமான படகில் ஆரோக்கியபுரம் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் நடுக்கடலில் தூண்டில்போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ததேயூசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் படகில் சுருண்டுவிழுந்த அவர் துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருடன் சென்றவர்கள் அவரது உடலை கரைக்கு கொண்டுவந்தனர். கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மீனவர் ததேயூஸ் (43). இவர் உள்பட ஐந்து பேர் ஜோன்ஸ் என்பவருக்குச் சொந்தமான படகில் ஆரோக்கியபுரம் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் நடுக்கடலில் தூண்டில்போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ததேயூசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் படகில் சுருண்டுவிழுந்த அவர் துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருடன் சென்றவர்கள் அவரது உடலை கரைக்கு கொண்டுவந்தனர். கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.