ETV Bharat / state

கன்னியாகுமரி 67வது தின விழா... முல்லைப் பெரியார் முதல் மொழிப் பிரச்சினை வரை சரித்திரம் பேசும் குமரிக் காவியம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 9:37 AM IST

Kanyakumari Day : திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த 67வது ஆண்டு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி, தமிழகத்துடன் இணைய காரணியாக இருந்த தலைவர்கள் பலர் நினைவு கூறப்பட்டனர்.

Special
Special
தாய் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இனைந்த 67 ஆண்டு தினம்- கோலாகல கொண்டாட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67வது ஆண்டு தினம் நேற்று (நவ. 1) கொண்டாடபட்டது. தமிழக அரசு சார்பில் நாகர்கோவிலில், குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அதேபோல், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் களியக்காவிளையில் உள்ள நினைவு சின்னம், புது கடையில் உள்ள நினைவு ஸ்துபியில் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம்: 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி, பல வகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. மாபெரும் போராட்டங்கள், பல தியாகம், உயிரிழப்புகள் என ஏராளமான வரலாறுகள் உள்ளன.

நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 67 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்த போது, அங்குள்ள தமிழர்கள் பல்வேறு வகையிலும் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். ஜாதிய பாகுபாடுகள் கடுமையாக இருந்த காலம் அது எனக் கூறப்படுகிறது. மன்னருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் மற்றும் நிலங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுக்கடுக்காய் வரிகள் விதிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட சமூக பெண்கள் மேல் சேலை அணிய கூட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தீவிர போராட்டம் : முத்துகுட்டி சுவாமி, சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு வெட்டி சாதி பாகுபாட்டை ஓரம் கட்டினார். இடுப்பில் துண்டு கட்டியவர்களை தலையில் துண்டு கட்ட வைத்தார். தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், ஆதிக்க அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் மார்ஷல் நேசமணி தலைமை ஏற்ற பின்னர், தீவரமாக மாறியது.

நேசமணி தலைமையில் தீவிரமடைந்த போராட்டம் வாயிலாக தமிழகத்துடன் குமரியை இணைக்க வைத்தது. சிதம்பரநாதன் நாடார், ரசாக், பி.எஸ்.மணி, குஞ்சன்நாடார், தாணு லிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார் என பலரது போராட்டம் இதில் குறிப்பிடத்தக்கது.

பின்னர் மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது குமரி இணைப்பு போராட்டம், மேலும் வலுப்பெற்றது. 1948ஆம் ஆண்டு குமரி, மங்காடு பகுதியில் குமரி உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேரளக் காவலர்கள் கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானம் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 தினத்தை விடுதலை தினமாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் அன்றைய தினத்தில் மார்த்தாண்டத்தில் போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன் கரை ராமையன், மணலி எம்.பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் பலியானார்கள்.

இதேபோல், புதுக்கடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேர் பலியாகினர். இந்த போராட்டம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 9 தாலுகாக்கள் கொண்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கோரி நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது கேட்டபடி தேவி குளம், பீர்மேடு பகுதிகள் இணைக்கப்பட்டு இருந்தால், தற்போது முல்லை பெரியாறு பிரச்சினை வந்து இருக்காது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நான்கு தாலுகா மற்றும் செங்கோட்டை தாலுகா பகுதிகள் மட்டுமே தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

மொழி போராட்ட தியாகி மார்ஷல் நேசமணி: குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை ஆண்டு தோறும் மொழி போராட்ட தியாகிகள் மார்ஷல் நேசமணி, போராட்டத்தில் உயிர் இழந்த தியாகிகளை போற்றும் விதமாக மறந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நவம்பர் 1ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டது. மேலும் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி அவர்களுக்கு மணி மண்டபம் கட்டி கொடுத்து மேலும் பெருமை சேர்த்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொதுமக்களும் இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த 6 பேர் கைது.. நெல்லையில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

தாய் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இனைந்த 67 ஆண்டு தினம்- கோலாகல கொண்டாட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67வது ஆண்டு தினம் நேற்று (நவ. 1) கொண்டாடபட்டது. தமிழக அரசு சார்பில் நாகர்கோவிலில், குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அதேபோல், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் களியக்காவிளையில் உள்ள நினைவு சின்னம், புது கடையில் உள்ள நினைவு ஸ்துபியில் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம்: 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி, பல வகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. மாபெரும் போராட்டங்கள், பல தியாகம், உயிரிழப்புகள் என ஏராளமான வரலாறுகள் உள்ளன.

நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 67 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்த போது, அங்குள்ள தமிழர்கள் பல்வேறு வகையிலும் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். ஜாதிய பாகுபாடுகள் கடுமையாக இருந்த காலம் அது எனக் கூறப்படுகிறது. மன்னருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் மற்றும் நிலங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுக்கடுக்காய் வரிகள் விதிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட சமூக பெண்கள் மேல் சேலை அணிய கூட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தீவிர போராட்டம் : முத்துகுட்டி சுவாமி, சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு வெட்டி சாதி பாகுபாட்டை ஓரம் கட்டினார். இடுப்பில் துண்டு கட்டியவர்களை தலையில் துண்டு கட்ட வைத்தார். தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், ஆதிக்க அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் மார்ஷல் நேசமணி தலைமை ஏற்ற பின்னர், தீவரமாக மாறியது.

நேசமணி தலைமையில் தீவிரமடைந்த போராட்டம் வாயிலாக தமிழகத்துடன் குமரியை இணைக்க வைத்தது. சிதம்பரநாதன் நாடார், ரசாக், பி.எஸ்.மணி, குஞ்சன்நாடார், தாணு லிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார் என பலரது போராட்டம் இதில் குறிப்பிடத்தக்கது.

பின்னர் மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது குமரி இணைப்பு போராட்டம், மேலும் வலுப்பெற்றது. 1948ஆம் ஆண்டு குமரி, மங்காடு பகுதியில் குமரி உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேரளக் காவலர்கள் கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானம் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 தினத்தை விடுதலை தினமாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் அன்றைய தினத்தில் மார்த்தாண்டத்தில் போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன் கரை ராமையன், மணலி எம்.பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் பலியானார்கள்.

இதேபோல், புதுக்கடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேர் பலியாகினர். இந்த போராட்டம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 9 தாலுகாக்கள் கொண்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கோரி நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது கேட்டபடி தேவி குளம், பீர்மேடு பகுதிகள் இணைக்கப்பட்டு இருந்தால், தற்போது முல்லை பெரியாறு பிரச்சினை வந்து இருக்காது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நான்கு தாலுகா மற்றும் செங்கோட்டை தாலுகா பகுதிகள் மட்டுமே தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

மொழி போராட்ட தியாகி மார்ஷல் நேசமணி: குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை ஆண்டு தோறும் மொழி போராட்ட தியாகிகள் மார்ஷல் நேசமணி, போராட்டத்தில் உயிர் இழந்த தியாகிகளை போற்றும் விதமாக மறந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நவம்பர் 1ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டது. மேலும் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி அவர்களுக்கு மணி மண்டபம் கட்டி கொடுத்து மேலும் பெருமை சேர்த்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொதுமக்களும் இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த 6 பேர் கைது.. நெல்லையில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.