ETV Bharat / state

குமரியில் அனல் பறக்கும் கால் பந்தாட்டப்போட்டி - நைஜீரிய வீரர்களும் பங்கேற்பு - கால்பந்தாட்ட வீரர்கள் அனல் பறக்கும் ஆட்டம்

கன்னியாகுமரி: தென்னிந்திய அளவில் நடைபெற்ற 49ஆம் ஆண்டு கால்பந்தாட்டப் போட்டியில் ஏராளமான ஆண்கள், பெண்கள் இரு அணிகளாக பிரிந்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

foodball match
foodball match
author img

By

Published : Jan 19, 2020, 12:44 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள மறவன்குடியிருப்பு ஊர் பொதுமக்கள் நடத்தும் தென்னிந்திய அளவிலான 49ஆம் ஆண்டு கால்பந்தாட்ட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட தென்மாநிலங்களிலிருந்தும் நைஜீரியா நாட்டிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஆண்கள், பெண்கள் அணிகளாக கலந்து கொண்டு ஆடுகளத்தில் பட்டையைக் கிளப்பினர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டியின் முடிவில் வெற்றி பெறும் அணிக்கு, தஸ்நேவிஸ் மாதா கோப்பையும் பரிசுப் பணமும் வழங்கப்படுகிறது. அதன்படி முதல் பரிசாக ரூ.1 லட்சமும் இரண்டாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ரூ. 30 ஆயிரமும் வழங்கப்படும். இதே போன்று பெண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்படவுள்ளது.

'விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்' - அய்யாக்கண்ணு!

குமரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டியைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

பந்தைப் பறக்க விடும் வீரர்கள்

இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இந்தக் கால இளைஞர்கள் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களை களத்திற்குக் கொண்டு வந்து அவர்களின் உடலையும் உள்ளத்தையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்கு விளையாடும் ஏராளமான வீரர்கள் பல்வேறு பிரபலமான கால்பந்தாட்ட அணிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்" எனக் கூறினர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள மறவன்குடியிருப்பு ஊர் பொதுமக்கள் நடத்தும் தென்னிந்திய அளவிலான 49ஆம் ஆண்டு கால்பந்தாட்ட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட தென்மாநிலங்களிலிருந்தும் நைஜீரியா நாட்டிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஆண்கள், பெண்கள் அணிகளாக கலந்து கொண்டு ஆடுகளத்தில் பட்டையைக் கிளப்பினர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டியின் முடிவில் வெற்றி பெறும் அணிக்கு, தஸ்நேவிஸ் மாதா கோப்பையும் பரிசுப் பணமும் வழங்கப்படுகிறது. அதன்படி முதல் பரிசாக ரூ.1 லட்சமும் இரண்டாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ரூ. 30 ஆயிரமும் வழங்கப்படும். இதே போன்று பெண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்படவுள்ளது.

'விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்' - அய்யாக்கண்ணு!

குமரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டியைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

பந்தைப் பறக்க விடும் வீரர்கள்

இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இந்தக் கால இளைஞர்கள் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களை களத்திற்குக் கொண்டு வந்து அவர்களின் உடலையும் உள்ளத்தையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்கு விளையாடும் ஏராளமான வீரர்கள் பல்வேறு பிரபலமான கால்பந்தாட்ட அணிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்" எனக் கூறினர்.

Intro:குமரி மாவட்டத்தில் தென்னிந்திய அளவிலான 49ம் ஆண்டு கால்பந்தாட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.Body:tn_knk_03_football_match_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

குமரி மாவட்டத்தில் தென்னிந்திய அளவிலான 49ம் ஆண்டு கால்பந்தாட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள மறவன்குடியிருப்பு ஊர் பொதுமக்கள் நடத்தும் தென்னிந்திய அளவிலான 49ம் ஆண்டு கால்பந்தாட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்தும் நைஜீரியா நாட்டில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் ஆண்கள் பெண்கள் அணிகள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
மேலும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டியில் முடிவில் வெற்றி பெறும் அணிக்கு தஸ்நேவிஸ் மாதா கோப்பையும் பரிசு பணமும் வழங்கப்படுகிறது.
அதன்படி முதல் பரிசாக 1 லட்சம், இரண்டாம் பரிசு 50000, மூன்றாம் பரிசு 30 ஆயிரம் வழங்கப்படும்.
இதேபோல் பெண்கள் பிரிவில் முதல் பரிசாக 5 ஆயிரமும் இரண்டாம் பரிசாக 3 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இதுபோல அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடும் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு தனியாக ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த கால்பந்தாட்ட போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இப்பகுதியில் குவிந்துள்ளனர்.
இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த கால இளைஞர்கள் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களை களத்திற்கு கொண்டு வந்து அவர்களின் உடலையும் உள்ளத்தையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்கு விளையாடும் ஏராளமான வீரர்கள் பல்வேறு பிரபலமான கால்பந்தாட்ட அணிகளில் விளையாடும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.