ETV Bharat / state

பொது இடங்களில் இதை செய்யாதீர்கள் - கரோனா மட்டும் ஆபத்து அல்ல!

author img

By

Published : Jul 19, 2020, 4:59 AM IST

கன்னியாகுமரி: உலகமே கரோனா அச்சத்தில் முடங்கி கிடக்கும் வேளையில், இந்த பொதுமுடக்க காலத்தில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்ப்போம் என கன்னியாகுமரி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

dont spit
dont spit

கரோனாவைத் தடுக்க தகுந்த இடைவெளி மட்டும் போதாது தனிமனித ஒழுக்கமும் தேவைப்படுகிறது. தனிமனித ஒழுக்கத்தால் கரோனாவை ஒழித்துவிட முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால், கரோனா போன்ற பெருந்தொற்றை ஒழிக்க மக்களும் அரசுடன் ஒத்துழைத்தால் மட்டுமே அதனைக் கட்டுப்படுத்த முடியும். தனிமனித ஒழுங்கு இல்லாமல் எதையும் கடந்துபோவது கடினம்தான்.

முகக்கவசம், அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, தகுந்த இடைவெளி இதனைக் காட்டிலும், எச்சிலை கண்ட இடத்தில் துப்புவதை தவிர்ப்பது மனித ஒழுக்கத்தை கடைப்படிப்பதேயாகும். நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள் என்று யாரும் எச்சரிக்கவில்லை என்று அறிவுப்பூர்வமாக கேட்பதை தவிர்க்கலாம். பொது இடத்தில் எச்சில் துப்புவது பேராபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கரோனா காலத்தில் மட்டுமல்ல, பொதுமுடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தாலும் எச்சில் துப்புவது ஆபத்துதான். 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், பொது இடங்களில் எச்சில் துப்புவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதைவிட பெரிய கூத்துகள் பேருந்துகளில்தான் அதிகமாக நிகழும். வாய் சிவக்க வெத்தலையை மென்று தின்று, பேருந்து ஜன்னல் வழியாக சாலையில் செல்வோர் மீது எச்சிலை துப்பி கரைப்படுத்துவது அநாகரிகமாக இருக்கும். தற்போது, பான் பராக், குட்கா போன்றவற்றைத் துப்புவது என்று மாறிவிட்டது. காலம் மாறிவிட்டதே தவிர பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது என்பதை யாரும் உணரவில்லை என்பதே நிதர்சனம்.

19ஆம் நூற்றாண்டிடு முதல் உலக நாடுகள் அனைத்தும் பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதமும், அதற்கு தடையும் விதித்துவருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள், காசநோய் அச்சம் காரணமாக பொதுவெளியில் எச்சில் துப்புவதை தடை செய்துள்ளன. காசநோயின் அச்சம் கடந்தபோதும், பொது இடத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தேநீர் கடைகள், சாலையோரங்கள், சந்தைகள், மக்கள் செல்லும் பொது இடங்களில் கூடும் மக்கள் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதபோன்று பிரிட்டனில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பான் மசாலா போன்ற போதை பாக்குகளை உமிழ்ந்து பொது இடத்தில் துப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கடும் எச்சரிக்கையுடன் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வியப்பாகவும் பார்க்கலாம், ஏன் இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் என்ற கேள்வியும் சிலருக்கு எழக்கூடும். இந்தியாவில் எச்சில் துப்புவதற்கு தடைகள் இருந்தாலும் அவை பெயரளவில் கடைப்பிடிக்கப்படுவதுதான் கேலிக்கூத்தாக உள்ளது. இந்தியாவில் 1997ஆம் ஆண்டு புகைப்பிடித்தல் மற்று பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடைவிதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், பிகார், கேரளா போன்ற மாநிலங்களில் இவை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டில் 2002ஆம் ஆண்டு பொது இடத்தில் எச்சில் துப்புதல், புகைப்பிடிப்பதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சளியால் அவதிப்படுவார். சளி இருந்தால் கூடவே இருமலும் இருக்கும். இருமலோடு பொது இடத்தில் துப்ப அதிக வாய்ப்புள்ளது. எனவே அவர் துப்பும் எச்சிலால் கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

இதனை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். எச்சில் துப்புவது பெரிய குற்றமில்லை என்று வாதிடுவோர்களுக்கும் இவை பொருந்தும். காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா தடுப்பு பணியில் உயிரை பணையம் வைத்து பணியாற்றி கொண்டிருக்கின்றனர். அவர்களின் செயலுக்கு மதிப்பளித்து, சட்டத்தை மதிக்க வேண்டியது நமது தலையாய கடமையாக உள்ளது.

அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் முகக்கவசம், தகுந்த இடைவெளி, பொது இடத்தில் எச்சில் துப்புவதை தவிர்ப்பது போன்றவற்றை குறித்து அம்மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு செய்து வருகிறது. விழிப்புணர்வு செய்யப்பட்டாலும் அதனை மக்கள் முறையாக கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கன்னியாகுமரியில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா கடந்த 10 நாள்களாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்த வாரத்தில் தினசரி 100க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு எவ்வளவோ தீவிர நடவடிக்கை மேற்கொண்டும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் மக்களைத் திருத்த அபராதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

தற்போது, கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையாலும், காவல் துறையின் முன்னேற்பாடுகளாலும், கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சரியான முறையில் அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால், கரோனா அதிவேகமாக பரவுகிறது. கன்னியாகுமரியில் மே மாதம்வரை 100கூட தொற்று இல்லாமல் இருந்தது. ஏப்ரல் மாதம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்து ஜூன் மாதத்தில் வேகமாகப் பரவி ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்தை கடந்துவிடும் சூழ்நிலை வந்துவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம்

மக்கள் கண்டிப்பான முறையில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பாமல், அடிக்கடி கை கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல் துறையினர் முகக்கவசம் அணியாமல் வருவோரிடம் நூறு ரூபாய் அபராதம் விதித்து வருகிறோம். இதை ஒரு விழிப்புணர்வாகத்தான் செய்துவருகிறோம். கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் முகக்கவசத்தின் அவசியத்தை உணர்த்துகிறோம்" எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கரோனா நோயை கட்டுப்படுத்துவது குறித்து சுபாஷ் கூறுகையில், "கரோனா தொற்றை கட்டுப்படுத்த நமது நாட்டில் ஏராளமான சட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் முதலில் இதை கடைப்பிடித்தனர். எனினும், தற்போது இதனை கண்டுகொள்வதில்லை. மக்கள் முறையாக மாஸ்க் அணிவதில்லை. கை கழுவுவதை கைவிட்டு விட்டனர். தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இதனை மாவட்ட நிர்வாகம் தற்போது எதையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். தண்டனையை கடுமையாக்க வேண்டும் இதன் மூலம்தான் மக்களை கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் எத்தனை கோயில்கள் மூடப்பட்டுள்ளன? உயர் நீதிமன்றம் கேள்வி!

கரோனாவைத் தடுக்க தகுந்த இடைவெளி மட்டும் போதாது தனிமனித ஒழுக்கமும் தேவைப்படுகிறது. தனிமனித ஒழுக்கத்தால் கரோனாவை ஒழித்துவிட முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால், கரோனா போன்ற பெருந்தொற்றை ஒழிக்க மக்களும் அரசுடன் ஒத்துழைத்தால் மட்டுமே அதனைக் கட்டுப்படுத்த முடியும். தனிமனித ஒழுங்கு இல்லாமல் எதையும் கடந்துபோவது கடினம்தான்.

முகக்கவசம், அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, தகுந்த இடைவெளி இதனைக் காட்டிலும், எச்சிலை கண்ட இடத்தில் துப்புவதை தவிர்ப்பது மனித ஒழுக்கத்தை கடைப்படிப்பதேயாகும். நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள் என்று யாரும் எச்சரிக்கவில்லை என்று அறிவுப்பூர்வமாக கேட்பதை தவிர்க்கலாம். பொது இடத்தில் எச்சில் துப்புவது பேராபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கரோனா காலத்தில் மட்டுமல்ல, பொதுமுடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தாலும் எச்சில் துப்புவது ஆபத்துதான். 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், பொது இடங்களில் எச்சில் துப்புவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதைவிட பெரிய கூத்துகள் பேருந்துகளில்தான் அதிகமாக நிகழும். வாய் சிவக்க வெத்தலையை மென்று தின்று, பேருந்து ஜன்னல் வழியாக சாலையில் செல்வோர் மீது எச்சிலை துப்பி கரைப்படுத்துவது அநாகரிகமாக இருக்கும். தற்போது, பான் பராக், குட்கா போன்றவற்றைத் துப்புவது என்று மாறிவிட்டது. காலம் மாறிவிட்டதே தவிர பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது என்பதை யாரும் உணரவில்லை என்பதே நிதர்சனம்.

19ஆம் நூற்றாண்டிடு முதல் உலக நாடுகள் அனைத்தும் பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதமும், அதற்கு தடையும் விதித்துவருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள், காசநோய் அச்சம் காரணமாக பொதுவெளியில் எச்சில் துப்புவதை தடை செய்துள்ளன. காசநோயின் அச்சம் கடந்தபோதும், பொது இடத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தேநீர் கடைகள், சாலையோரங்கள், சந்தைகள், மக்கள் செல்லும் பொது இடங்களில் கூடும் மக்கள் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதபோன்று பிரிட்டனில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பான் மசாலா போன்ற போதை பாக்குகளை உமிழ்ந்து பொது இடத்தில் துப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கடும் எச்சரிக்கையுடன் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வியப்பாகவும் பார்க்கலாம், ஏன் இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் என்ற கேள்வியும் சிலருக்கு எழக்கூடும். இந்தியாவில் எச்சில் துப்புவதற்கு தடைகள் இருந்தாலும் அவை பெயரளவில் கடைப்பிடிக்கப்படுவதுதான் கேலிக்கூத்தாக உள்ளது. இந்தியாவில் 1997ஆம் ஆண்டு புகைப்பிடித்தல் மற்று பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடைவிதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், பிகார், கேரளா போன்ற மாநிலங்களில் இவை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டில் 2002ஆம் ஆண்டு பொது இடத்தில் எச்சில் துப்புதல், புகைப்பிடிப்பதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சளியால் அவதிப்படுவார். சளி இருந்தால் கூடவே இருமலும் இருக்கும். இருமலோடு பொது இடத்தில் துப்ப அதிக வாய்ப்புள்ளது. எனவே அவர் துப்பும் எச்சிலால் கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

இதனை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். எச்சில் துப்புவது பெரிய குற்றமில்லை என்று வாதிடுவோர்களுக்கும் இவை பொருந்தும். காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா தடுப்பு பணியில் உயிரை பணையம் வைத்து பணியாற்றி கொண்டிருக்கின்றனர். அவர்களின் செயலுக்கு மதிப்பளித்து, சட்டத்தை மதிக்க வேண்டியது நமது தலையாய கடமையாக உள்ளது.

அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் முகக்கவசம், தகுந்த இடைவெளி, பொது இடத்தில் எச்சில் துப்புவதை தவிர்ப்பது போன்றவற்றை குறித்து அம்மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு செய்து வருகிறது. விழிப்புணர்வு செய்யப்பட்டாலும் அதனை மக்கள் முறையாக கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கன்னியாகுமரியில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா கடந்த 10 நாள்களாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்த வாரத்தில் தினசரி 100க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு எவ்வளவோ தீவிர நடவடிக்கை மேற்கொண்டும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் மக்களைத் திருத்த அபராதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

தற்போது, கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையாலும், காவல் துறையின் முன்னேற்பாடுகளாலும், கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சரியான முறையில் அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால், கரோனா அதிவேகமாக பரவுகிறது. கன்னியாகுமரியில் மே மாதம்வரை 100கூட தொற்று இல்லாமல் இருந்தது. ஏப்ரல் மாதம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்து ஜூன் மாதத்தில் வேகமாகப் பரவி ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்தை கடந்துவிடும் சூழ்நிலை வந்துவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம்

மக்கள் கண்டிப்பான முறையில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பாமல், அடிக்கடி கை கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல் துறையினர் முகக்கவசம் அணியாமல் வருவோரிடம் நூறு ரூபாய் அபராதம் விதித்து வருகிறோம். இதை ஒரு விழிப்புணர்வாகத்தான் செய்துவருகிறோம். கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் முகக்கவசத்தின் அவசியத்தை உணர்த்துகிறோம்" எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கரோனா நோயை கட்டுப்படுத்துவது குறித்து சுபாஷ் கூறுகையில், "கரோனா தொற்றை கட்டுப்படுத்த நமது நாட்டில் ஏராளமான சட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் முதலில் இதை கடைப்பிடித்தனர். எனினும், தற்போது இதனை கண்டுகொள்வதில்லை. மக்கள் முறையாக மாஸ்க் அணிவதில்லை. கை கழுவுவதை கைவிட்டு விட்டனர். தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இதனை மாவட்ட நிர்வாகம் தற்போது எதையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். தண்டனையை கடுமையாக்க வேண்டும் இதன் மூலம்தான் மக்களை கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் எத்தனை கோயில்கள் மூடப்பட்டுள்ளன? உயர் நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.