ETV Bharat / state

குமரி மக்களவைத் தொகுதியில் 51ஆவது முறையாக களம் காணும் தேர்தல் மன்னன்!

author img

By

Published : Mar 26, 2019, 4:22 PM IST

Updated : Mar 26, 2019, 4:39 PM IST

கன்னியாகுமரி: தேர்தல் மன்னன் நாகூர்மீரான் பீர் முகமது 51ஆவது முறையாக குமரி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சுயேட்சை வேட்பாளர் பேட்டி

குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நாகூர் மீரான் பீர் முகமது. இவர் 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 50 முறை போட்டியிட்டுள்ளார். தற்போது நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தலில் 51ஆவது முறையாக குமரி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நான் நாகர்கோவில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் ஸ்டுடியோ கலர் லேப் வைத்து நடத்திவந்தேன். ஒருநாள் திடீரென எனது கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட நான் அரசு அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எனது பொருள்களும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்து 1989ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன்.

அப்போது முதல் இதுவரை 50 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது 51ஆவது முறையாக குமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் குமரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க பாடுபடுவேன்.

மேலும் குறைந்தது இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நாகூர் மீரான் பீர் முகமது. இவர் 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 50 முறை போட்டியிட்டுள்ளார். தற்போது நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தலில் 51ஆவது முறையாக குமரி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நான் நாகர்கோவில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் ஸ்டுடியோ கலர் லேப் வைத்து நடத்திவந்தேன். ஒருநாள் திடீரென எனது கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட நான் அரசு அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எனது பொருள்களும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்து 1989ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன்.

அப்போது முதல் இதுவரை 50 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது 51ஆவது முறையாக குமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் குமரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க பாடுபடுவேன்.

மேலும் குறைந்தது இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தேர்தல் மன்னன் நாகூர்மீரான் பீர் முஹம்மது தான் போட்டியிடும் 51 தேர்தலாக குமரி நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என உறுதி.


Body:குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் நாகூர் மீரான் பீர் முஹம்மது. இவர் 1989 ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், இடை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் 50 முறை போட்டியிட்டுள்ளார்.
தற்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் 51 ஆவது முறையாக குமரி மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்காக இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
நான் நாகர்கோவில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் ஸ்டூடியோ கலர் லேப் வைத்து நடத்தி வந்தேன். ஒருநாள் திடீரென எனது கடையை சீல் வைத்தனர். இதனால் எனக்கு பெரிய பணம் நஷ்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் எத்தனையோ முறை முறையிட்டும் எனது பொருள்களும் திரும்ப கிடைக்க வில்லை. இதனால் கோபம் அடைந்த நான் 1989 ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன்.
அதில் ஆரம்பித்து இதுவரை 50 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். காங்கேயத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன் அந்த தேர்தலில் எனக்கு 800 ஓட்டு கிடைத்தது. 1995இல் நரசிம்மராவை எதிர்த்து தேர்தலில் நின்றேன் எனக்கு ஆயிரம் ஓட்டு கிடைத்தது.
இதே போல கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், 2009ம் ஆண்டு சசிதரூர் உள்ளிட்ட பிரபல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். இந்த பாராளுமன்ற தேர்தலில் 51 ஆவது முறையாக குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன்.
நான் வெற்றி பெற்றால் குமரி மாவட்டம் தொழில் வளர்ச்சி பெருக பாடுபடுவேன். குறைந்தது இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



Conclusion:
Last Updated : Mar 26, 2019, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.