ETV Bharat / state

வியாபார நோக்கில் செயல்படும் அரசு மருத்துவர்!

கன்னியாகுமரி: சிங்களேயப்புரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் சதீஷ், வியாபார நோக்கில் செயல்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரிடம் சுகாதார அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Aug 11, 2019, 7:29 PM IST

வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவர் மீது புகார்

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்புதூர் அருகே சிங்களேயபுரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு வேலை செய்யும் அரசு மருத்துவர் சதீஷ், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான மருந்துகள் இருந்தும் அதனை நோயாளிகளுக்கு வழங்காமல், தான் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று வியாபார நோக்கத்தில் சிகிச்சை அளித்துள்ளார்.

வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவர் மீது புகார்

இதனால் மருத்துவர் சதீஷ் மீது நாகர்கோவில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் மதுசூதனிடம் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்புதூர் அருகே சிங்களேயபுரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு வேலை செய்யும் அரசு மருத்துவர் சதீஷ், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான மருந்துகள் இருந்தும் அதனை நோயாளிகளுக்கு வழங்காமல், தான் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று வியாபார நோக்கத்தில் சிகிச்சை அளித்துள்ளார்.

வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவர் மீது புகார்

இதனால் மருத்துவர் சதீஷ் மீது நாகர்கோவில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் மதுசூதனிடம் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தெங்கன்புதூர் அருகே சிங்கலேயப்புரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களை அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என கூறி, தான் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வியாபார ரீதீயாக செயல்பட்டு வருவதாக அரசு மருத்துவர் சதீஷ் மீது ஊர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்புதூர் அருகே சிங்களேயபுரி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்று வட்டாரங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான மருந்துகள் இருந்தும் அதனை நோயாளிகளுக்கு அண்மைய காலமாக வழங்குவது இல்லை என குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஊர் மக்கள் சார்பில் கடந்த மாதம் 15ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கபட்டு உள்ளது. அதில் சிங்களேயபுரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களை அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என கூறி தான் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வியாபார ரீதீயாக செயல்பட்டு வருவதாக அரசு மருத்துவர் சதீஷ் மீது ஊர் மக்கள் புகார் மனுவில் குறிபிட்டு இருந்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவிலில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் டாக்டர் மது சூதனன் புகார் அளிதவர்களிடம் முதற் கட்ட விசாரணையை தொடங்கினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.