ETV Bharat / state

முக்கோண காதல்.. சினிமா பாணியில் காதலி செய்த பலே சம்பவம்! - Love triangle

கன்னியாகுமரி வேர்கிளம்பி அருகே சினிமா பாணியில் காதலனிடம் பரிசு பொருட்களை திரும்ப கொடுப்பது போல் அழைத்து கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 12, 2022, 4:35 PM IST

Updated : Nov 12, 2022, 5:12 PM IST

கன்னியாகுமரி: வேர்கிளம்பியை அடுத்த மாத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின். டிப்ளமோ முடித்துவிட்டு வெல்டராக பணியாற்றும் இவருக்கு அணைக்கரை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 19-வயதான ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

நட்பு நாளடைவில் காதலமாக மாறிய நிலையில் இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவினிடம் கூறியுள்ளார். பிரவினும் தனது பெற்றோருடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து வைக்கலாம் என ஜெஸ்லின் வீட்டார் கூறியுள்ளனர்.

இதனால், நெருக்கம் அதிகரித்த இருவரும் தனிமையாக ஆங்காங்கே தம்பதி போல் சுற்றித் திரிந்ததோடு மாறி மாறி கிப்ட் கொடுத்து காதலை வளர்த்துள்ளனர். இந்நிலையில் ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவின் உடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டதால், அவரது நடத்தையில் பிரவினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் பிரவின், ஜெஸ்லினை கண்காணிக்க தொடங்கினார். இதில் ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதையும் அவருடன் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி திரிவதையும் கண்டறிந்தார். அதன் பிறகு பிரவின், ஜெஸ்லினை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் பிரவினிடம் தான் தற்போது ஜெனித்தை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கூறியதோடு தன்னை மறந்து விடுமாறு கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரவின் தான் கொடுத்த பரிசு பொருள்களை திரும்ப கேட்டுள்ளார். இந்நிலையில் பிரவின் உடனான காதலை முறித்து கொண்ட ஜெஸ்லின் பரிசு பொருள்களை திரும்ப தருவதாக கூறி நேற்று (நவ.11) முன்னாள் காதலன் பிரவினை வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

பிரவின் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் புதிய காதலன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் ஜெஸ்லின் வந்தார். பிரவினை பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் கொண்ட கூலிப்படை கும்பல், பிரவினின் பைக் மீது மோதி கீழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

காதலனை தனியாக அழைத்து தாக்கிய காதலி

இதை முன்னாள் காதலி ஜெஸ்லின் புதிய காதலன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில் அங்கு திரண்ட பொதுமக்கள் காயமடைந்த பிரவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் குறித்து பிரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய இருவர் என மொத்தம் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்த நான்கு பேரும் தலைமறைவாகினர். அவர்கள் நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டில் துப்பாக்கி தயாரிப்பு... 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

கன்னியாகுமரி: வேர்கிளம்பியை அடுத்த மாத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின். டிப்ளமோ முடித்துவிட்டு வெல்டராக பணியாற்றும் இவருக்கு அணைக்கரை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 19-வயதான ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

நட்பு நாளடைவில் காதலமாக மாறிய நிலையில் இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவினிடம் கூறியுள்ளார். பிரவினும் தனது பெற்றோருடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து வைக்கலாம் என ஜெஸ்லின் வீட்டார் கூறியுள்ளனர்.

இதனால், நெருக்கம் அதிகரித்த இருவரும் தனிமையாக ஆங்காங்கே தம்பதி போல் சுற்றித் திரிந்ததோடு மாறி மாறி கிப்ட் கொடுத்து காதலை வளர்த்துள்ளனர். இந்நிலையில் ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவின் உடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டதால், அவரது நடத்தையில் பிரவினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் பிரவின், ஜெஸ்லினை கண்காணிக்க தொடங்கினார். இதில் ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதையும் அவருடன் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி திரிவதையும் கண்டறிந்தார். அதன் பிறகு பிரவின், ஜெஸ்லினை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் பிரவினிடம் தான் தற்போது ஜெனித்தை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கூறியதோடு தன்னை மறந்து விடுமாறு கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரவின் தான் கொடுத்த பரிசு பொருள்களை திரும்ப கேட்டுள்ளார். இந்நிலையில் பிரவின் உடனான காதலை முறித்து கொண்ட ஜெஸ்லின் பரிசு பொருள்களை திரும்ப தருவதாக கூறி நேற்று (நவ.11) முன்னாள் காதலன் பிரவினை வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

பிரவின் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் புதிய காதலன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் ஜெஸ்லின் வந்தார். பிரவினை பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் கொண்ட கூலிப்படை கும்பல், பிரவினின் பைக் மீது மோதி கீழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

காதலனை தனியாக அழைத்து தாக்கிய காதலி

இதை முன்னாள் காதலி ஜெஸ்லின் புதிய காதலன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில் அங்கு திரண்ட பொதுமக்கள் காயமடைந்த பிரவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் குறித்து பிரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய இருவர் என மொத்தம் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்த நான்கு பேரும் தலைமறைவாகினர். அவர்கள் நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டில் துப்பாக்கி தயாரிப்பு... 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Last Updated : Nov 12, 2022, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.