ETV Bharat / state

அலங்கோலமாக மாறிய காந்தி மண்டபம்- விரைவில் சீரமைத்திடுக! - ganthi memorial place in kanyakumari

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத் தலமான காந்தி மண்டபம் பராமரிப்பின்றி உடைந்து அலங்கோலமாக காணப்படுகின்றது, அதன் வளாகத்தில் உள்ள பூங்கா ஆகியவற்றை சீரமைத்து சுத்தமாக வைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பராமரிப்பு இல்லாத காந்தி மண்டபம்
author img

By

Published : Aug 22, 2019, 12:16 PM IST

கன்னியாகுமரியில் காந்தியின் அஸ்தியை அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது .அதனை அப்போதைய கேரள ஆளுநர் திறந்துவைத்தார். மத ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த காந்தி மண்டபத்தின் கட்டட அமைப்பானது இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காந்தி மண்டபம் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளதால் இதை நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பார்த்துச் செல்கின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த காந்தி மண்டபம் பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால் கட்டட பகுதிகள் உடைந்து கீழே விழுந்துள்ளது.

உடைந்த பாகங்கள் சுற்றுலாப் பயணிகள் மீது அடிக்கடி விழுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து பார்க்கும் இடமானது, உடைந்து பராமரிப்பின்றி கிடப்பதால் நமது நாட்டிற்கு அவமானம் என இங்கு உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அலங்கோலமாக மாறிய காந்தி மண்டபம்

மேலும் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மண்டபத்தையும், பூங்காவையும் சீரமைத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித் துறை பொறியாளரிடம் கேட்டபோது, தமிழ்நாடு அரசு காந்தி மண்டபத்தை சீரமைக்க 30 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்க இருப்பதாகவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் காந்தியின் அஸ்தியை அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது .அதனை அப்போதைய கேரள ஆளுநர் திறந்துவைத்தார். மத ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த காந்தி மண்டபத்தின் கட்டட அமைப்பானது இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காந்தி மண்டபம் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளதால் இதை நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பார்த்துச் செல்கின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த காந்தி மண்டபம் பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால் கட்டட பகுதிகள் உடைந்து கீழே விழுந்துள்ளது.

உடைந்த பாகங்கள் சுற்றுலாப் பயணிகள் மீது அடிக்கடி விழுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து பார்க்கும் இடமானது, உடைந்து பராமரிப்பின்றி கிடப்பதால் நமது நாட்டிற்கு அவமானம் என இங்கு உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அலங்கோலமாக மாறிய காந்தி மண்டபம்

மேலும் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மண்டபத்தையும், பூங்காவையும் சீரமைத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித் துறை பொறியாளரிடம் கேட்டபோது, தமிழ்நாடு அரசு காந்தி மண்டபத்தை சீரமைக்க 30 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்க இருப்பதாகவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Intro:சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பராமரிப்பின்றி உடைந்து அலங்கோலமாக காணப்படும் காந்தி மண்டபம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள பூங்கா ஆகியவற்றை சீரமைத்து சுத்தமாக வைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Body:சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பராமரிப்பின்றி உடைந்து அலங்கோலமாக காணப்படும் காந்தி மண்டபம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள பூங்கா ஆகியவற்றை சீரமைத்து சுத்தமாக வைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசப்பிதா என்று எல்லாராலும் அன்புடன் போற்றப்படும் அண்ணல் காந்தி அடிகள் கடந்த 1948 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது அஸ்தி கன்னியாகுமரி கொண்டுவரப்பட்டு முக்கடலும் சங்கமிக்கும் கடலில் கரைக்கப்பட்டது .அவரது அஸ்தியை அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது .அதனை அப்போதைய கேரள கவர்னர் பி.எஸ் .ராவ் திறந்துவைத்தார். மத ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த காந்தி மண்டபத்தின் கட்டிட அமைப்பு இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ முறையில் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தின் நடுவில் காந்தி அஸ்தி கட்டம் உள்ளது .இந்த அஸ்தி கட்டத்தின் மேல் ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சூரிய ஒளி சிலநிமிடங்கள் விழுகின்றது. இதனை ஆயிரக்கணக்கானோர் வந்து கண்டு களித்து செல்கின்றனர் .இந்த காந்திமண்டபம் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளதால் இதை தினமும் நூற்றுக்கணக்கானோர் பார்த்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த காந்திமண்டபம் பல வருடங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் கட்டிடப் பகுதிகள் உடைந்து கீழே விழுந்து காணப்படுகிறது. பொதுவாக காந்தி மண்டபத்திற்கு வருவோர் இங்கு வந்து சிறிது நேரம் அமைதியாக தியானம் செய்து விட்டு செல்வர் .ஆனால் தற்போது காந்தி மண்டபம் பராமரிப்பற்ற காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வந்து அமர்ந்து தியானம் செய்யும் சூழல் இல்லை. உடைந்த பாகங்கள் சுற்றுலா பயணிகள் மீது அடிக்கடி உடைந்து விழுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து பார்க்கும் இடங்களில் உடைந்து பராமரிப்பின்றி கிடப்பது நமது நாட்டிற்கு அவமானம் ஆகும். என இங்கு உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மண்டபத்தை சீரமைத்து வர்ணம் பூசி பராமரிக்க வேண்டும் எனவும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் உள்ள உடைந்து கிடக்கும் குழந்தைகள் விளையாடும் உபகரணங்களையும் சரிசெய்து இந்த பூங்காவை பராமரிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் இடம் கேட்டபோது தமிழக அரசு ஏற்கனவே காந்தி மண்டபத்தில் சீரமைக்க 30 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் நிதி உதவி உள்ளதாகவும் இதற்கான அனுமதி கிடைத்தவுடன் பராமரிப்பு பணிகளை தூங்கி விடுவோம் என்றார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.