ETV Bharat / state

ஹாங்காங் ராட்ச கப்பலால் நொறுங்கிய குமரி மீனவர்கள் படகு.. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மீனவர்கள் வேதனை!

author img

By

Published : Mar 28, 2023, 2:11 PM IST

ஹாங்காங் நாட்டு ராட்ச கப்பல் மோதியதில், கன்னியாகுமரி மீனவர்களின் படகு நொறுங்கிய நிலையில், இதுகுறித்து புகார் அளித்தும் குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கருஞ்சட்டை அணிந்தபடி மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Etv Bharat
Etv Bharat

ஹாங்காங் ராட்ச கப்பலால் நொறுங்கிய மீனவர்களின் படகு; புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குமரி ஆட்சியரிடம் முறையீடு

கன்னியாகுமரி: ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஹாங்காங் நாட்டுக் கப்பல் குறித்து குளச்சல் கடலோர காவல் குழும காவல்துறையிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குமரி மீனவர்கள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துச் சேதமடைந்த விசைப்படகிற்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என முறையீடு வைத்துள்ளனர்.

அதோடு, இது குறித்துப் புகாரளித்து ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் கடத்தி வருவதாகக் கருஞ்சட்டை அணிந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு அளித்துள்ளனர். மேலும், மீனவர்களுக்கு எதிராகவும், கப்பல் நிறுவன அதிபர்களுக்கு ஆதரவாகவும் குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் செயல்படுவதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அருட்பணியாளர் தேவாலயத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிதாசன் என்பவருக்குச் சொந்தமான ரூபி என்ற விசைப்படகில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவைச் சார்ந்த 9 மீனவர்களுடன் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஆழ்கடலில் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சீனாவின் ஷான்ஞ்சியாங் என்ற துறைமுகத்திலிருந்து அவ்வழியாகத் துபாய் சென்று கொண்டிருந்த ஹாங்காங் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ பிரண்ட்டியர் டேங்கர் (NEW FRONTIER SHIP) கப்பலானது விசைப்படகின் மீது நேருக்குநேராக மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சேதமான விசைபடகுடன் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சில விசைப்படகு மீனவர்கள் மீட்டனர். பின்னர், ராட்சத கப்பல் மோதியதால் நொறுங்கிய அந்த விசைப்படகை 5 நாட்களாக கடலில் கயிறு கட்டி இழுத்து தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வந்து கரை சேர்த்தனர்.

சேதமடைந்த விசைப்படகு தேங்காய் பட்டணம் மீன் பிடிதுறை முகத்திற்கு வந்து சேர்ந்த போது தண்ணீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒன்பது மீனவர்களது உயிர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தி, மீனவர்களுக்குப் பல லட்ச ரூபாய் பொருள் இழப்பையும், பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பையும், மனதளவில் மீனவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஹாங்காங் நாட்டு நியூ பிரண்டியர் கப்பல் மீதும், கப்பல் மாலுமி மீதும், கப்பல் உரிமையாளர் மீது குளச்சல் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

குளச்சல் கடலோர காவல் நிலைய அதிகாரிகள் மீனவர்களிடம் வாக்குமூலம் வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை மீனவ பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நடந்தவை குறித்து விளக்கிய பின்னர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குளச்சல் கடலோர காவல் குழும அதிகாரி குழித்துறை அரசு மருத்துவமனையில் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.

ஆனால், சிஎஸ்ஆர் பதிவு மட்டும் செய்துவிட்டு வேறு எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நடுக்கடலில் மீனவர்களின் படகைச் சேதமடையச் செய்து மீனவர்களின் உயிருக்குப் பேராபத்தை விளைவித்த ஹாங்காங் நாட்டு ராட்சத கப்பல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடலோர காவல் குழுமம் காலம் தாழ்த்தி வருவதால், உடனடியாக அக்கப்பல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் தான் இந்த மீனவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதோடு, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இந்த மூன்று மாதங்களில் நான்கு விசைப்படகுகள் வெளிநாட்டுக் கப்பல்களால் சேதமடைந்துள்ளன. இந்த படகுகள் அனைத்திற்கும் உரிய இழப்பீடு தொகையைப் பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும், படகுக்கு உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறி கருப்பு சட்டை அணிந்து மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை தெற்காசிய மீனவர் தோழமையினர் சந்தித்து வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

மீனவர்களுக்கு எதிராகக் கப்பல் நிறுவன அதிபர்களுக்கு ஆதரவாக குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் செயல்படுவதாகவும் குமரி மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் உள்ள மீனவர்கள் கேரளாவில் மையமாக வைத்து தொழில் செய்து வருகின்றனர். கேரளா அரசு தமிழ் மீனவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருந்த போதிலும், தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஒரு வழக்கு கூட பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது என தெற்காசிய மீனவ கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: வேலூர் சிறார் பாதுகாப்பு இல்லத்தில் 6 பேர் தப்பியோட்டம்.. அச்சத்தில் பாதுகாவலர்கள் கலெக்டர் வீடு முன்பு தஞ்சம்!

ஹாங்காங் ராட்ச கப்பலால் நொறுங்கிய மீனவர்களின் படகு; புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குமரி ஆட்சியரிடம் முறையீடு

கன்னியாகுமரி: ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஹாங்காங் நாட்டுக் கப்பல் குறித்து குளச்சல் கடலோர காவல் குழும காவல்துறையிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குமரி மீனவர்கள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துச் சேதமடைந்த விசைப்படகிற்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என முறையீடு வைத்துள்ளனர்.

அதோடு, இது குறித்துப் புகாரளித்து ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் கடத்தி வருவதாகக் கருஞ்சட்டை அணிந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு அளித்துள்ளனர். மேலும், மீனவர்களுக்கு எதிராகவும், கப்பல் நிறுவன அதிபர்களுக்கு ஆதரவாகவும் குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் செயல்படுவதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அருட்பணியாளர் தேவாலயத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிதாசன் என்பவருக்குச் சொந்தமான ரூபி என்ற விசைப்படகில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவைச் சார்ந்த 9 மீனவர்களுடன் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஆழ்கடலில் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சீனாவின் ஷான்ஞ்சியாங் என்ற துறைமுகத்திலிருந்து அவ்வழியாகத் துபாய் சென்று கொண்டிருந்த ஹாங்காங் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ பிரண்ட்டியர் டேங்கர் (NEW FRONTIER SHIP) கப்பலானது விசைப்படகின் மீது நேருக்குநேராக மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சேதமான விசைபடகுடன் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சில விசைப்படகு மீனவர்கள் மீட்டனர். பின்னர், ராட்சத கப்பல் மோதியதால் நொறுங்கிய அந்த விசைப்படகை 5 நாட்களாக கடலில் கயிறு கட்டி இழுத்து தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வந்து கரை சேர்த்தனர்.

சேதமடைந்த விசைப்படகு தேங்காய் பட்டணம் மீன் பிடிதுறை முகத்திற்கு வந்து சேர்ந்த போது தண்ணீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒன்பது மீனவர்களது உயிர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தி, மீனவர்களுக்குப் பல லட்ச ரூபாய் பொருள் இழப்பையும், பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பையும், மனதளவில் மீனவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஹாங்காங் நாட்டு நியூ பிரண்டியர் கப்பல் மீதும், கப்பல் மாலுமி மீதும், கப்பல் உரிமையாளர் மீது குளச்சல் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

குளச்சல் கடலோர காவல் நிலைய அதிகாரிகள் மீனவர்களிடம் வாக்குமூலம் வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை மீனவ பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நடந்தவை குறித்து விளக்கிய பின்னர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குளச்சல் கடலோர காவல் குழும அதிகாரி குழித்துறை அரசு மருத்துவமனையில் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.

ஆனால், சிஎஸ்ஆர் பதிவு மட்டும் செய்துவிட்டு வேறு எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நடுக்கடலில் மீனவர்களின் படகைச் சேதமடையச் செய்து மீனவர்களின் உயிருக்குப் பேராபத்தை விளைவித்த ஹாங்காங் நாட்டு ராட்சத கப்பல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடலோர காவல் குழுமம் காலம் தாழ்த்தி வருவதால், உடனடியாக அக்கப்பல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் தான் இந்த மீனவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதோடு, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இந்த மூன்று மாதங்களில் நான்கு விசைப்படகுகள் வெளிநாட்டுக் கப்பல்களால் சேதமடைந்துள்ளன. இந்த படகுகள் அனைத்திற்கும் உரிய இழப்பீடு தொகையைப் பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும், படகுக்கு உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறி கருப்பு சட்டை அணிந்து மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை தெற்காசிய மீனவர் தோழமையினர் சந்தித்து வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

மீனவர்களுக்கு எதிராகக் கப்பல் நிறுவன அதிபர்களுக்கு ஆதரவாக குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் செயல்படுவதாகவும் குமரி மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் உள்ள மீனவர்கள் கேரளாவில் மையமாக வைத்து தொழில் செய்து வருகின்றனர். கேரளா அரசு தமிழ் மீனவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருந்த போதிலும், தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஒரு வழக்கு கூட பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது என தெற்காசிய மீனவ கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: வேலூர் சிறார் பாதுகாப்பு இல்லத்தில் 6 பேர் தப்பியோட்டம்.. அச்சத்தில் பாதுகாவலர்கள் கலெக்டர் வீடு முன்பு தஞ்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.