ETV Bharat / state

ஓகி புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு குடும்பங்களுடன் அஞ்சலி செலுத்தி மக்கள்! - மீனவர்களுக்கு குடும்பங்களுடன் அஞ்சலி செலுத்தி மக்கள்

கன்னியாகுமரி: ஓகி புயல் தாக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த மீனவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி
உயிரிழந்த மீனவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி
author img

By

Published : Nov 30, 2019, 7:34 AM IST

கன்னியாகுமரியில் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இரவு ஆழ் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஓகி புயலில் சிக்கினார்கள்.

அவர்களை மீட்க அரசு தரப்பில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்காததால் மூன்று நாட்களாக கடலில் உண்ண உணவின்றி, உயிருக்குப் போராடி, ஏராளமான மீனவர்கள் கடலில் நீந்தியே கரை வந்து சேர்ந்தனர்.

அதே வேளையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 164 பேர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த 204 மீனவர்கள் கடலில் பலியானார்கள். அந்த துயர சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று கன்னியாகுமரி வீரர்கள் தினமாக அனுசரிக்கபட்டது.

அந்தவகையில் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் அப்பகுதி மீனவர்கள் குடும்பங்களுடன் வருகை தந்து, புயலில் இறந்த மீனவர்களின் புகைப்படங்களுக்கும், கடலுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த மீனவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி

இனிமேல் இது போன்ற புயல்கள் வந்தால் மீனவர்களை காப்பாற்ற, குமரி மாவட்டத்தில் தொலை தொடர்பு மையம் அமைக்க வேண்டும். படகுகளில் செல்லும் மீனவர்களைத் தொடர்பு கொள்ள சேட்டிலைட் ஃபோன் வசதி, கடல் ஆம்புலன்ஸ் என பல்வேறு வசதிகளை அமைக்கக் கோரி தெற்காசிய மீனவ கூட்டமைப்பு தலைவர் அருட்பணியாளர் சர்ச்சில் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரியில் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இரவு ஆழ் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஓகி புயலில் சிக்கினார்கள்.

அவர்களை மீட்க அரசு தரப்பில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்காததால் மூன்று நாட்களாக கடலில் உண்ண உணவின்றி, உயிருக்குப் போராடி, ஏராளமான மீனவர்கள் கடலில் நீந்தியே கரை வந்து சேர்ந்தனர்.

அதே வேளையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 164 பேர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த 204 மீனவர்கள் கடலில் பலியானார்கள். அந்த துயர சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று கன்னியாகுமரி வீரர்கள் தினமாக அனுசரிக்கபட்டது.

அந்தவகையில் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் அப்பகுதி மீனவர்கள் குடும்பங்களுடன் வருகை தந்து, புயலில் இறந்த மீனவர்களின் புகைப்படங்களுக்கும், கடலுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த மீனவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி

இனிமேல் இது போன்ற புயல்கள் வந்தால் மீனவர்களை காப்பாற்ற, குமரி மாவட்டத்தில் தொலை தொடர்பு மையம் அமைக்க வேண்டும். படகுகளில் செல்லும் மீனவர்களைத் தொடர்பு கொள்ள சேட்டிலைட் ஃபோன் வசதி, கடல் ஆம்புலன்ஸ் என பல்வேறு வசதிகளை அமைக்கக் கோரி தெற்காசிய மீனவ கூட்டமைப்பு தலைவர் அருட்பணியாளர் சர்ச்சில் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Intro:கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் ஓக்கி புயல் தாக்கிய இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடல் வீரர்கள் தினமாக அனுசரிக் கப்பட்டது. புயலில் இறந்த மீனவர்களின் புகைபடங்களுக்கும், கடலுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி மீனவர்கள் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.Body:கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவிலும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி இரவு மற்றும் 30ம் தேதி அதிகாலையில் ஓக்கி புயல் தாக்குதல் எற்பட்டத்தில் ஆழ் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலில் சிக்கினார்கள்.
அவர்களை மீட்க அரசு தரப்பில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்காததால் மூன்று நாட்களாக கடலில் உண்ண உணவின்றி, உயிருக்கு போராடி நீந்தியே ஏராளமான மீனவர்கள் கரை வந்து சேர்ந்தனர். அதே வேளையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 164 பேர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 204 மீனவர்கள் கடலில் பலியானார்கள்.
அத்தகைய கொடூர சம்பவம் நடைபெற்று இரண்டாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் அதன் நினைவு தினம் அனுசரிக்க பட்டு வருகிறது. அந்தவகையில் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் அப் பகுதி மீனவர்கள் குடும்பங்களுடன் வருகை தந்து புயலில் இறந்த மீனவர்களின் புகை படங்களுக்கும், கடலுக்கும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தி கடல் வீரர்கள் தினமாக அனுசரித்தனர்.
இனிமேல் இது போன்ற புயல்கள் வந்தால் மீனவர்களை காப்பாற்ற, குமரி மாவட்டத்தில் தொலை தொடர்பு மையம் வேண்டும், படகுகளில் செல்லும் மீனவர்களை தொடர்பு கொள்ள சேட்லைட் போன் வசதி, கடல் ஆம்புலன்ஸ் என பல்வேறு கோரிக்கைகள் தெற்காசிய மீனவ கூட்டமைப்பு தலைவர் அருட்பணியாளர் சர்ச்சில் வலியுறுத்தியுள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.