ETV Bharat / state

உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் டிஜிபி திரிபாதி நேரில் ஆய்வு

author img

By

Published : Jan 10, 2020, 7:33 AM IST

கன்னியாகுமரி: குமரி காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி நேரில் ஆய்வுசெய்தார். குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

DSP is on investigation
DSP is on investigation

குமரி கேரள எல்லை சோதனைச் சாவடியில் காவல் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் குமரி மாவட்டம் வந்த தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, காவல் துறை உயர் அலுவலர்கள் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

பின்னர் வழக்கின் நிலை குறித்தும் காவல் துறையினர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்ட காவல் துறை தலைமை இயக்குநர் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி நேரில் ஆய்வு

இதனைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட வில்சனின் வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் அங்கிருந்து புறப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வில்சனின் உடலையை பார்த்தார்.

இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்

குமரி கேரள எல்லை சோதனைச் சாவடியில் காவல் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் குமரி மாவட்டம் வந்த தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, காவல் துறை உயர் அலுவலர்கள் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

பின்னர் வழக்கின் நிலை குறித்தும் காவல் துறையினர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்ட காவல் துறை தலைமை இயக்குநர் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி நேரில் ஆய்வு

இதனைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட வில்சனின் வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் அங்கிருந்து புறப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வில்சனின் உடலையை பார்த்தார்.

இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்

Intro:கன்னியாகுமரி: குமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் தமிழக டிஜிபி திரிபாதி நேரில் ஆய்வு. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவு.
Body:குமரி கேரள எல்லையில் செக்போஸ்டில் காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் குமரி மாவட்டம் வந்த தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் வழக்கின் நிலை குறித்தும் போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு தெரிந்து கொண்ட தமிழக டிஜிபி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் வீட்டுக்கு சென்று அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் உடலை காண புறப்பட்டு சென்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.