ETV Bharat / state

விலைவாசி உயர்வு: நாகர்கோவிலில் மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 12, 2020, 5:14 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே விலைவாசி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விலைவாசி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு விலைவாசியைக் குறைக்கக் கோரி கோஷம் எழுப்பினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகிவருகிறார்கள்.

எனவே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசியைக் குறைக்க மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விலைவாசி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு விலைவாசியைக் குறைக்கக் கோரி கோஷம் எழுப்பினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகிவருகிறார்கள்.

எனவே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசியைக் குறைக்க மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.