ETV Bharat / state

கள்ளச் சாராயம் : மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ட்ரோன் மூலம் காவல்துறையினர் சோதனை!

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த புகாரையடுத்து ட்ரோன் மூலம் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

Counterfeit liquor: Kumari police raided by drone in the Western Ghats
கள்ள சாராயம் : மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் ட்ரோன் மூலமாக குமரி காவல்துறையினர் சோதனை!
author img

By

Published : Apr 22, 2020, 1:15 PM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் அத்தியாவசியக் கடைகளை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் கடைகள், தனியாருக்குச் சொந்தமான மதுபானக் கூடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூக விரோதிகளால் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. ஊரடங்கு பாதுகாப்பு, சோதனைப் பணிகளில் ஈடுபட்டுவரும் காவல் துறையினருக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில், கள்ளச் சாராயம் விற்பனையாளர்கள் பெறும் சவாலாக உள்ளனர்.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் மலை பகுதிகளான கீரிப்பாறை, வெள்ளாம்பி, காளிகேசம், பொய்கை அணை, ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோதிகளால் கள்ளச் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்துவதாக அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, பொய்கை அணை, ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கள்ளச் சாராய புழக்கம் உள்ளதா என ட்ரோன் மூலமாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையில் காவல்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், இந்த சோதனையானது மாவட்டம் முழுவதும் நடைபெறும் என்றும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சோதனை நடத்திய வீடியோவை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் ட்ரோன் மூலமாக குமரி காவல்துறையினர் சோதனை

கள்ளச் சாராய சமூக விரோத கூட்டங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தமிழ்நாட்டு காவல்துறையின் ஹைடெக் கண்காணிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினரும், மாவட்ட காவல்துறையினரும் இணைந்து குழுக்கள் அமைத்து, தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஊரடங்கில் திறந்திருக்கும் கடைகளுக்கு சீல்வைக்க வலியுறுத்தல்!

கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் அத்தியாவசியக் கடைகளை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் கடைகள், தனியாருக்குச் சொந்தமான மதுபானக் கூடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூக விரோதிகளால் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. ஊரடங்கு பாதுகாப்பு, சோதனைப் பணிகளில் ஈடுபட்டுவரும் காவல் துறையினருக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில், கள்ளச் சாராயம் விற்பனையாளர்கள் பெறும் சவாலாக உள்ளனர்.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் மலை பகுதிகளான கீரிப்பாறை, வெள்ளாம்பி, காளிகேசம், பொய்கை அணை, ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோதிகளால் கள்ளச் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்துவதாக அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, பொய்கை அணை, ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கள்ளச் சாராய புழக்கம் உள்ளதா என ட்ரோன் மூலமாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையில் காவல்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், இந்த சோதனையானது மாவட்டம் முழுவதும் நடைபெறும் என்றும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சோதனை நடத்திய வீடியோவை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் ட்ரோன் மூலமாக குமரி காவல்துறையினர் சோதனை

கள்ளச் சாராய சமூக விரோத கூட்டங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தமிழ்நாட்டு காவல்துறையின் ஹைடெக் கண்காணிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினரும், மாவட்ட காவல்துறையினரும் இணைந்து குழுக்கள் அமைத்து, தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஊரடங்கில் திறந்திருக்கும் கடைகளுக்கு சீல்வைக்க வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.