ETV Bharat / state

புற்றுநோயால் உயிரிழந்த முதியவருக்கு கரோனா பாதிப்பு உறுதி

author img

By

Published : May 11, 2020, 4:28 PM IST

கன்னியாகுமரி: புற்றுநோயால் உயிரிழந்த 63 வயது முதியவருக்கு, நடந்த பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

kanniyakumari
kanniyakumari

சென்னை மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டம் மயிலாடி பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்தவரின் உடல், கவலைக்கிடமான நிலையில் இருந்ததால், சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், கடந்த 9ஆம் தேதி அழைத்துவரப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதியவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி 9ஆம் தேதி இரவே உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பாக அவரிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் வருவதற்காக, அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை அவருக்கு சளி மாதிரி முடிவுகள் வந்தன. அதில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா கண்டறியப்படவில்லை. எனினும், ஆம்புலன்சில் அவருடன் வந்த அவரது மகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மயிலாடி பகுதி

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பலியான முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடல் விதிமுறைகளின்படி தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்

சென்னை மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டம் மயிலாடி பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்தவரின் உடல், கவலைக்கிடமான நிலையில் இருந்ததால், சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், கடந்த 9ஆம் தேதி அழைத்துவரப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதியவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி 9ஆம் தேதி இரவே உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பாக அவரிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் வருவதற்காக, அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை அவருக்கு சளி மாதிரி முடிவுகள் வந்தன. அதில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா கண்டறியப்படவில்லை. எனினும், ஆம்புலன்சில் அவருடன் வந்த அவரது மகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மயிலாடி பகுதி

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பலியான முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடல் விதிமுறைகளின்படி தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.