ETV Bharat / state

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்; காங்கிரஸ் தலமையில் சாலை மறியல்! - நெடுஞ்சாலை துறை

கன்னியாகுமரி: நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலமையில் நடந்த சாலை மறியல்
author img

By

Published : Sep 28, 2019, 6:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலையாக விளங்கும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கிவருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் அதிகமாகி வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலமையில் நடந்த சாலை மறியல்

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், பணிக்கு செல்லும் ஊழியர்களும், பொதுமக்களும் போக்குவரத்து நெசிசலில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கடந்த மூன்று மாத காலமாக நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கல் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் இன்று நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வில்லுக்குறி பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோரின் தலைமையில் திரண்ட இருநூறுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களும், காவல் துறையினரும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர், அலுவலர்கள் தரப்பில் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சாலையை சீர் செய்ய பள்ளி மாணவி செய்த காரியத்தை பாருங்களேன்...!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலையாக விளங்கும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கிவருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் அதிகமாகி வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலமையில் நடந்த சாலை மறியல்

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், பணிக்கு செல்லும் ஊழியர்களும், பொதுமக்களும் போக்குவரத்து நெசிசலில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கடந்த மூன்று மாத காலமாக நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கல் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் இன்று நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வில்லுக்குறி பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோரின் தலைமையில் திரண்ட இருநூறுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களும், காவல் துறையினரும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர், அலுவலர்கள் தரப்பில் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சாலையை சீர் செய்ய பள்ளி மாணவி செய்த காரியத்தை பாருங்களேன்...!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

tn_knk_02_congress_road_protest_visual_7203868Body:கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலையாக விளங்குவது நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையாகும். சுமார் 60-கிலோ மீட்டர் நீளமான இந்த பிரதான தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கி வருகின்ற.
தென் மாவட்டங்களில் இருந்து காய்கறி பழங்கள் பெரிய சரக்கு வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு இந்த வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் இந்த நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியான தோட்டியோடு, அழகியமண்டபம், தக்கலை, கல்லுவிளை வரையில் சுமார் 15-கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளில் அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நாகர்கோயில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாது அளவிற்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் அதிகமாகி வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் பணிக்கு செல்லும் ஊழியர்களும், பொதுமக்களும் போக்குவரத்து நெசிசலில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கடந்த மூன்று மாத காலமாக நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் செவி சாய்க்காவில்லை
இந்நிலையில், இன்று நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வில்லுக்குறி பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான பிரின்ஸ் மற்றும் ராஜேஸ்குமார் தலைமையில் திரண்ட இருநூறுக்கு மேற்பட்ட காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் தரப்பில் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1-மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.