ETV Bharat / state

முறை தவறிய காதலால், 12-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!

author img

By

Published : Jun 3, 2020, 1:51 AM IST

கன்னியாகுமரி: முறை தவறிய காதலால் 12-ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவனை காவலர்கள் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

சிறுமியிடம் தகாத உறவு வைத்த கல்லூரி மாணவர் கைது
கல்லூரி மாணவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரியை அடுத்த மணக்கரை கிராமத்தில் 17 வயதான சிறுமி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர்.

மேலும் இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள், பள்ளி சிறுமி மற்றும் அவரின் தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமி தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அண்ணன் முறையான சஞ்சீவ் என்பவருடன் பழகி வந்துள்ளார். சஞ்சீவ் நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை கல்லூரியில் வரலாறு பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த ஜனவரி மாதம் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி வெளியே அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார். இவர்களது காதல் விபரம் சிறுமியின் தாய், தந்தைக்கு தெரியவரவே அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனாலும், இருவரும் காதலை விடவில்லை.

சிறுமி வீட்டில் தனியாக இருக்கும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சஞ்சீவ் சிறுமி வீட்டிற்கே சென்று தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். இது தெரிந்து பதறிய சிறுமியின் தாய், கர்ப்பத்தை கலைக்க பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அத்தனையும் தோல்வியில் முடிய, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் விஷயம் காவலர்களுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது பள்ளி சிறுமியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மணப்பாறை அருகே மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வலைவீச்சு!

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரியை அடுத்த மணக்கரை கிராமத்தில் 17 வயதான சிறுமி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர்.

மேலும் இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள், பள்ளி சிறுமி மற்றும் அவரின் தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமி தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அண்ணன் முறையான சஞ்சீவ் என்பவருடன் பழகி வந்துள்ளார். சஞ்சீவ் நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை கல்லூரியில் வரலாறு பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த ஜனவரி மாதம் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி வெளியே அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார். இவர்களது காதல் விபரம் சிறுமியின் தாய், தந்தைக்கு தெரியவரவே அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனாலும், இருவரும் காதலை விடவில்லை.

சிறுமி வீட்டில் தனியாக இருக்கும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சஞ்சீவ் சிறுமி வீட்டிற்கே சென்று தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். இது தெரிந்து பதறிய சிறுமியின் தாய், கர்ப்பத்தை கலைக்க பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அத்தனையும் தோல்வியில் முடிய, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் விஷயம் காவலர்களுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது பள்ளி சிறுமியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மணப்பாறை அருகே மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.