ETV Bharat / state

தக்கலை அருகே சைக்கிள் திருட்டு: குற்றவாளிக்கு வலைவீச்சு!

author img

By

Published : Sep 14, 2020, 12:59 PM IST

கன்னியாகுமரி: தக்கலை அருகே கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் திருடிச்சென்ற சம்பவத்தையடுத்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

bicycle-theft-parked-in-front-of-the-shop-police-web-to-the-culprit
bicycle-theft-parked-in-front-of-the-shop-police-web-to-the-culprit

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் மரியதாஸ் என்பவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றிவரும் விக்டர் என்பவர் நேற்று பணி முடித்து வீடு திரும்பும்போது மழை பெய்துகொண்டிருந்ததால், கடை முன்பு தனது சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வேறு வாகனத்தில் சென்றுள்ளார்.

இந்நிலையில் விக்டர் இன்று காலை கடைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் சைக்கிளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து விக்டர் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.

கடைமுன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே சூப்பர் மார்க்கெட்டின் கடை பூட்டை உடைத்து திருட முயற்சித்த, திருடனை அவ்வழியாக ரோந்து சென்ற காவல் துறையினர் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை: குற்றவாளிகளைத் தேடும் முயற்சியில் இளம்பெண்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் மரியதாஸ் என்பவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றிவரும் விக்டர் என்பவர் நேற்று பணி முடித்து வீடு திரும்பும்போது மழை பெய்துகொண்டிருந்ததால், கடை முன்பு தனது சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வேறு வாகனத்தில் சென்றுள்ளார்.

இந்நிலையில் விக்டர் இன்று காலை கடைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் சைக்கிளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து விக்டர் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.

கடைமுன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே சூப்பர் மார்க்கெட்டின் கடை பூட்டை உடைத்து திருட முயற்சித்த, திருடனை அவ்வழியாக ரோந்து சென்ற காவல் துறையினர் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை: குற்றவாளிகளைத் தேடும் முயற்சியில் இளம்பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.