ETV Bharat / state

கூட்டுறவு சங்க வங்கியில் முறைகேடு - அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் - மயிலாடி பேரூராட்சி

கன்னியாகுமரி: மயிலாடி கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டு கொள்ளாத அலுவலர்களை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
author img

By

Published : Aug 2, 2019, 5:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சிக்குட்பட்ட மயிலாடி கூட்டுறவு வங்கியில் பேரூராட்சித் தலைவர் முறைகேடாக பணம் எடுத்ததாக தெரிகிறது. இதற்கு கூட்டுறவு வங்கி அலுவலர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கூட்டுறவு வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டதின் போது வங்கி அலுவலர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டது.

கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர்

மேலும் முறைகேடான வகையில் எடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக கூட்டுறவு வங்கியில் திருப்பி ஒப்படைப்பதுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சிக்குட்பட்ட மயிலாடி கூட்டுறவு வங்கியில் பேரூராட்சித் தலைவர் முறைகேடாக பணம் எடுத்ததாக தெரிகிறது. இதற்கு கூட்டுறவு வங்கி அலுவலர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கூட்டுறவு வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டதின் போது வங்கி அலுவலர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டது.

கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர்

மேலும் முறைகேடான வகையில் எடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக கூட்டுறவு வங்கியில் திருப்பி ஒப்படைப்பதுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாடி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளையும் அதை கண்டு கொள்ளாத அதிகாரிகளையும் கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Body:கன்னியாகுமரி குமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாடி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளையும் அதை கண்டு கொள்ளாத அதிகாரிகளையும் கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடி கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிகவை உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் உறுப்பினர் தங்கம் நடேசன், அதிமுக உறுப்பினர் டாக்டர் சுதாகர், பாஜக உறுப்பினர் ஜெகன் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு வங்கியால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடான வகையில் பணத்தை எடுத்த முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த கூட்டுறவு சங்க அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் முறைகேடான வகையில் எடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக கூட்டுறவு சங்கத்தில் திருப்பி ஒப்படைப்பதுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.