ETV Bharat / state

பாலாற்றில் மூழ்கிய 3 சிறுமிகள்: இருவரின் உடல்கள் மீட்பு!

காஞ்சிபுரம்: பாலாற்றில் நேற்று (டிச. 03) குளிக்கச் சென்று மூழ்கிய மூன்று சிறுமிகளில், இருவரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

author img

By

Published : Dec 4, 2020, 10:20 AM IST

two-girls-bodies-recovered-palar-river
two-girls-bodies-recovered-palar-river

காஞ்சிபுரம் மாவட்டம் தும்பவனம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் பூர்ணி (15), அவரது உறவினர் மகள்களான ஜெயஸ்ரீ (15), லட்சு (எ) சுபாஸ்ரீ (14) மூவரும் குருவிமலை அருகே உள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால், இது குறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சிறுமிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று ஜெயஸ்ரீ (15), பூரணி (15) ஆகிய இரண்டு சிறுமிகளின் உடல்கள் பாலாற்றின் கரையோரம் மீட்கப்பட்டன.

தற்போது இரண்டு உடல்களும், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள லட்சு (எ) சுபாஸ்ரீ சிறுமியினைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: தண்ணீரில் மூழ்கிய சிறுவன்; இரண்டு நாட்கள் கழித்து உடல் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் தும்பவனம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் பூர்ணி (15), அவரது உறவினர் மகள்களான ஜெயஸ்ரீ (15), லட்சு (எ) சுபாஸ்ரீ (14) மூவரும் குருவிமலை அருகே உள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால், இது குறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சிறுமிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று ஜெயஸ்ரீ (15), பூரணி (15) ஆகிய இரண்டு சிறுமிகளின் உடல்கள் பாலாற்றின் கரையோரம் மீட்கப்பட்டன.

தற்போது இரண்டு உடல்களும், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள லட்சு (எ) சுபாஸ்ரீ சிறுமியினைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: தண்ணீரில் மூழ்கிய சிறுவன்; இரண்டு நாட்கள் கழித்து உடல் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.