ETV Bharat / state

குளிக்கச் சென்ற சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி

காஞ்சிபுரம்: குளத்து நீரில் குளிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Aug 7, 2020, 6:11 AM IST

குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி அடுத்த முசரவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் ஜெகத்பிரியன்(8) மற்றும் திருப்புட்குழி ரோட்டுத்தெருவை சேர்ந்த சோமுவின் மகன் சுஜன்(12) ஆகிய இரு சிறுவர்களும் அருகில் உள்ள தாமரை குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது ஆழம் தெரியாததால் எதிர்பாராமல் குளத்து நீரில் சிறுவர்கள் இருவரும் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரமாக சிறுவர்களை காணாமல் அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கித் தேடி சிறுவர்கள் இருவரது உடல்களையும் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து சிறுவர்கள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி அடுத்த முசரவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் ஜெகத்பிரியன்(8) மற்றும் திருப்புட்குழி ரோட்டுத்தெருவை சேர்ந்த சோமுவின் மகன் சுஜன்(12) ஆகிய இரு சிறுவர்களும் அருகில் உள்ள தாமரை குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது ஆழம் தெரியாததால் எதிர்பாராமல் குளத்து நீரில் சிறுவர்கள் இருவரும் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரமாக சிறுவர்களை காணாமல் அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கித் தேடி சிறுவர்கள் இருவரது உடல்களையும் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து சிறுவர்கள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.