ETV Bharat / state

பாதாளச் சாக்கடை கழிவுநீர் பிரச்சினை: எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள்

author img

By

Published : Dec 2, 2020, 7:13 AM IST

காஞ்சிபுரம்: பாதாளச் சாக்கடை கழிவுநீரை திறந்தவெளி கால்வாயில் கலப்பதற்காக மேற்கொள்ளும் பணியினை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

drainage problem
drainage problem

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குள்பட்ட 44ஆவது வார்டு சேஷாத்ரிபாளையம் தெரு விரிவாக்கம் பொன்மகள் அவின்யூ பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்தக் குடியிருப்புப் பகுதியின் அருகிலேயே மஞ்சள் நீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாயின் கரை ஓரத்தில் கைக்குழந்தைகள், முதியவர்கள், ஏழை எளிய மக்கள் வசித்துவருகின்றனர்.

இதனால், சேஷாத்திரிபாளையம் தெரு பகுதியில் அவ்வப்போது பாதாளச் சாக்கடையில் கழிவுநீர் வெளியேறி பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்நிலையில், நகராட்சி ஊழியர்கள் விதிகளுக்கு முரணான வகையில், சாலைப் பகுதியில் பைப்லைன் அமைத்து மஞ்சள் நீர் கால்வாயில், பாதாள சாக்கடை கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சேஷாத்திரிபாளையம் தெரு மக்கள், காஞ்சிபுரம் பெருநகராட்சி மேற்கொள்ளும் இப்பணியைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பாபா ராம்தேவ் ஆதரவு!

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குள்பட்ட 44ஆவது வார்டு சேஷாத்ரிபாளையம் தெரு விரிவாக்கம் பொன்மகள் அவின்யூ பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்தக் குடியிருப்புப் பகுதியின் அருகிலேயே மஞ்சள் நீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாயின் கரை ஓரத்தில் கைக்குழந்தைகள், முதியவர்கள், ஏழை எளிய மக்கள் வசித்துவருகின்றனர்.

இதனால், சேஷாத்திரிபாளையம் தெரு பகுதியில் அவ்வப்போது பாதாளச் சாக்கடையில் கழிவுநீர் வெளியேறி பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்நிலையில், நகராட்சி ஊழியர்கள் விதிகளுக்கு முரணான வகையில், சாலைப் பகுதியில் பைப்லைன் அமைத்து மஞ்சள் நீர் கால்வாயில், பாதாள சாக்கடை கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சேஷாத்திரிபாளையம் தெரு மக்கள், காஞ்சிபுரம் பெருநகராட்சி மேற்கொள்ளும் இப்பணியைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பாபா ராம்தேவ் ஆதரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.