ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் அரசு அலுவலர்கள் முப்பெரும் விழா - காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலர்கள் முப்பெரும் விழா

காஞ்சிபுரம்: அரசு அலுவலர்கள் முப்பெரும்விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.

முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட சண்முகராஜன்
முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட சண்முகராஜன்
author img

By

Published : Feb 2, 2020, 10:30 AM IST

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய வடக்கு மண்டல நூற்றாண்டு விழா மாநாட்டின் ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடந்தது.

இதில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த விழா குறித்து சண்முகராஜன் கூறுகையில், “அரசு ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட சண்முகராஜன்

21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஒரு நபர் குழுவின் பரிந்துரை அறிக்கையை அரசு ஏற்க வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு - முக்கிய குற்றவாளியை பிடிக்க மக்கள் உதவியை நாடிய சிபிசிஐடி

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய வடக்கு மண்டல நூற்றாண்டு விழா மாநாட்டின் ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடந்தது.

இதில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த விழா குறித்து சண்முகராஜன் கூறுகையில், “அரசு ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட சண்முகராஜன்

21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஒரு நபர் குழுவின் பரிந்துரை அறிக்கையை அரசு ஏற்க வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு - முக்கிய குற்றவாளியை பிடிக்க மக்கள் உதவியை நாடிய சிபிசிஐடி

Intro:
டிஎன்பிசி தேர்வில் முறைகேடு செய்து அரசு பணியில் கலந்துள்ள கறுப்பு ஆடுகளை உடனடியாக கண்டறிந்து அவர்களை களையெடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் பேட்டி


Body:தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய வடக்கு மண்டல நூற்றாண்டு விழா மாநாடு, ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடந்தது சங்க மாநிலத் தலைவர் சண்முகராஜன் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஒரு நபர் குழுவின் பரிந்துரை அறிக்கையை அரசு ஏற்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

மேலும் சங்க மாநில தலைவர் சண்முகராஜன் அளித்த பேட்டியில்

டிஎன்பிசி நடைபெற்ற தேர்வில் நடைபெற்ற முறைகேடு மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது. நிச்சயமாக இந்த முறைகேடு மூலம் அரசு பணியில் கலந்துள்ள கறுப்பு ஆடுகளை உடனடியாக கண்டறிந்து அவர்களை களையெடுக்க வேண்டும். தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசு பணியில் இளைஞர்கள் அமரலாம் என்ற நம்பிக்கையை இந்த தேர்வு மூலம் நடைபெற்ற முறைகேடு சம்பவம் கெடுக்கும் வகையில் உள்ளது. Conclusion:டிஎன்பிசியில் நடைபெற்ற தேர்வு முறைகேடு தொடர்பில் அரசு அலுவலர்களோ அல்லது வெளி நபரோ என யாராக இருந்தாலும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் சங்கம் வலியுறுத்துகிறது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.