ETV Bharat / state

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய் வெடித்து போக்குவரத்து பாதிப்பு!

author img

By

Published : Nov 22, 2019, 9:35 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலைகளுக்குச் செல்லும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய் வெடித்து 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

Sriperumbudur

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம், பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்களும் இருசக்கர வாகனங்கள், கார், கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளுக்குச் செல்லும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய்களில் அதிகப்படியான தண்ணீர் செலுத்தப்பட்டு அவற்றில் கசிவுகள் ஏற்படுகிறதா என்பது சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய அலுவலர்களால் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

தண்ணீர் குழாய் வெடித்து 5 அடி உயரத்திற்கு தண்ணீர் வெளியேறி போக்குவரத்து பாதிப்பு

இச்சோதனையில் குன்றத்தூரையடுத்த நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட குழாய்களில் கசிவு ஏற்பட்டு சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க: கனமழையால் நெடுஞ்சாலையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு!

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம், பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்களும் இருசக்கர வாகனங்கள், கார், கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளுக்குச் செல்லும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய்களில் அதிகப்படியான தண்ணீர் செலுத்தப்பட்டு அவற்றில் கசிவுகள் ஏற்படுகிறதா என்பது சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய அலுவலர்களால் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

தண்ணீர் குழாய் வெடித்து 5 அடி உயரத்திற்கு தண்ணீர் வெளியேறி போக்குவரத்து பாதிப்பு

இச்சோதனையில் குன்றத்தூரையடுத்த நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட குழாய்களில் கசிவு ஏற்பட்டு சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க: கனமழையால் நெடுஞ்சாலையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு!

Intro:ஸ்ரீபெரும்புதூர்,
தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்டு நந்தம்பாக்கம் பகுதியில் அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் குன்றத்தூர்}ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்ற வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.


Body:ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம், பிள்ளைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ளது. இங்கு கார், கனரக வாகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும்,உள்ளன இந்த தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் செல்லும்
குழாய்களில் கசிவுகள் உள்ளதா என கண்டறிய அவ்வபோது, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள், அதிக அழுத்தத்தில் தண்ணீரை செலுத்தி சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் இடையே அமைக்கப்பட்ட குழாய்களில் கசிவு உள்ளதா என கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. Conclusion:இந்த சோதனையின் ஒருபகுதியாக நந்தம்பாக்கம் பகுதியில் குழாயில் ஏற்பட்ட கசிவால் சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் குன்றத்தூர்} ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.