ETV Bharat / state

அத்திவரதரை ஒரு கோடியே 7 ஆயிரத்து 500 பேர் தரிசனம்!  - காஞ்சி ஆட்சியர் தகவல் - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: அத்திவரதரை 16ஆம் தேதி வரை ஒரு கோடியே ஏழாயிரத்து 500 பேர் தரிசனம் செய்துள்ளனர் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.

athivarathar
author img

By

Published : Aug 18, 2019, 9:46 AM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் 48ஆவது நாளில் அந்த வைபவம் நிறைவுபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், கடந்த 48 நாட்களாக அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொண்ட பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரு கோடியே ஏழாயிரத்து 500 பேர் சாமி தரிசனம்

இதுவரையில் ஒரு கோடியே ஏழாயிரத்து 500 பேர் அத்திரவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இன்றுமுதல் வழக்கம்போல் பக்தர்கள் வரதராஜ சாமியை தரிசனம் செய்யலாம் எனவும் வைபவத்திற்காக ஏற்படுத்திய பாதைகளை ஓரிரு நாளிலும், நகர் முழுவதும் ஏற்படுத்திய காவல் தடுப்புகள், சாலை சீரமைப்பு உள்ளிட்டவைகள் பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என்று கூறினார்.

மேலும், இரண்டு நாட்கள் நகர் முழுவதும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும், இதற்காக துப்புரவுப் பணியாளர்கள் முழுமையாக ஈடுபடுவார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை9 முதல் தகவல் அறிக்கை காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் 48ஆவது நாளில் அந்த வைபவம் நிறைவுபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், கடந்த 48 நாட்களாக அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொண்ட பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரு கோடியே ஏழாயிரத்து 500 பேர் சாமி தரிசனம்

இதுவரையில் ஒரு கோடியே ஏழாயிரத்து 500 பேர் அத்திரவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இன்றுமுதல் வழக்கம்போல் பக்தர்கள் வரதராஜ சாமியை தரிசனம் செய்யலாம் எனவும் வைபவத்திற்காக ஏற்படுத்திய பாதைகளை ஓரிரு நாளிலும், நகர் முழுவதும் ஏற்படுத்திய காவல் தடுப்புகள், சாலை சீரமைப்பு உள்ளிட்டவைகள் பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என்று கூறினார்.

மேலும், இரண்டு நாட்கள் நகர் முழுவதும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும், இதற்காக துப்புரவுப் பணியாளர்கள் முழுமையாக ஈடுபடுவார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை9 முதல் தகவல் அறிக்கை காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Intro:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆதி அத்திகிரி வரதர் வைபவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி துவங்கி இன்று 48 வது நாளுடன் நிறைவு பெறுகிறது இந்நிலையில் இன்று அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு ஸ்ரீ ஆதிஅத்திகிரி வரதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இறுதியாக தைலக்காப்பு நிறைவு பெற்றபின் விழா இனிதே நிறைவு பெறுகிறது Body:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆதி அத்திகிரி வரதர் வைபவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி துவங்கி இன்று 48 வது நாளுடன் நிறைவு பெறுகிறது இந்நிலையில் இன்று அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு ஸ்ரீ ஆதிஅத்திகிரி வரதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இறுதியாக தைலக்காப்பு நிறைவு பெற்றபின் விழா இனிதே நிறைவு பெறுகிறது இந்நிலையில் விழா இறுதி நாள் குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.. இதில் கடந்த 48 நாட்களாக ஸ்ரீ காஞ்சி ஆதி அத்திகிரி வைபவத்தில் பணியாற்றிய அனைத்து துறை அலுவலருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொண்ட பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் இதுவரையில் ஒரு கோடியே 7 ஆயிரத்து 500 பேர் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளதாகவும் இன்று மாலை 3 மணி அளவில் தேவராஜ சுவாமி உற்சவர் வசந்த மண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் ஐ தரிசித்த பின் ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் அனந்த சரஸ் குளத்திற்கு திரும்பும் நிகழ்வு துவங்கும் எனவும் இதற்காக சிறப்பு பணியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செய்துள்ளதாகவும் அந்தப் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.. மேலும் வரும் ஞாயிறு முதல் வழக்கம்போல் பக்தர்கள் தேவராஜ சாமியை தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் வைபவத்திற்காக ஏற்படுத்திய பாதைகளை ஓரிருநாளில் நகர் முழுவதும் ஏற்படுத்திய காவல் தடுப்புகள் சாலை சீரமைப்பு உள்ளிட்டவைகள் பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் சரி செய்யப்படும் எனவும் நாளை முதல் இரண்டு நாட்கள் நகர் முழுவதும் துப்புரவு பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்காக துப்புரவு பணியாளர்கள் முழுமையாக ஈடுபடுவார்கள் எனவும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம்போல் காஞ்சி நகரில் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் இதுவரை 9 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இந்நிகழ்வின்போது அத்திவரதர் வைபவத்திற்காக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பாஸ்கரன் , தொல்லியல் துறை இயக்குனர் சுப்பையா மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்...

பேட்டி பா. பொன்னையா. - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.