பொங்கல் பொது விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று சென்னைக்கு திரும்பியதால் சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை முடிந்து நாளை பணிக்கு செல்ல அனைவரும் சென்னை நோக்கி படையெடுத்துவருகின்றனர். இதனால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து காணப்பட்டன. ஒவ்வொரு காரும் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை ஆமை வேகத்தில் கடந்தன. இதனால் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:சென்னைக்கு மேலும் அழகு சேர்க்கும் தூண் பூங்கா!