ETV Bharat / state

"தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அறிவிக்க வேண்டும்"- சாட்டையை சொடுக்கும் குமரி அனந்தன்!

காஞ்சிபுரம்: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்திய பேரியக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.

author img

By

Published : Aug 25, 2019, 11:52 PM IST

சாட்டையை சொடுக்கும் குமரி அனந்தன்!

காந்தி பேரவை அமைப்பின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக்கோரி, அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக, அதன் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்

இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வருகை புரிந்த அவர் அங்குள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் .பின் செய்தியாளர்களிடம் பேசிய குமரி அனந்தன், " பேரறிஞர் அண்ணா திருக்குறளின் வழிகாட்டுதலின்படியும், அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் தற்போது அவரின் பெயரைக் கொண்டு ஆளும் அதிமுகவினர், வீதிகள் தோறும் மதுக்கடைகளைத் திறந்து மக்களை சீரழித்து வருகின்றனர். அதிமுக அரசுக்கு காந்தி பேரவை சார்பில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக் கோரிக்கை வைத்த நிலையில் அதை ஏற்க வில்லை. ஆகையால் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறினார்.

காந்தி பேரவை அமைப்பின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக்கோரி, அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக, அதன் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்

இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வருகை புரிந்த அவர் அங்குள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் .பின் செய்தியாளர்களிடம் பேசிய குமரி அனந்தன், " பேரறிஞர் அண்ணா திருக்குறளின் வழிகாட்டுதலின்படியும், அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் தற்போது அவரின் பெயரைக் கொண்டு ஆளும் அதிமுகவினர், வீதிகள் தோறும் மதுக்கடைகளைத் திறந்து மக்களை சீரழித்து வருகின்றனர். அதிமுக அரசுக்கு காந்தி பேரவை சார்பில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக் கோரிக்கை வைத்த நிலையில் அதை ஏற்க வில்லை. ஆகையால் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறினார்.

Intro:
அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15 அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்க கோரி காந்திய பேரியக்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அதன் தலைவர் குமரி அனந்தன் காஞ்சிபுரத்தில் செய்தியாளரிடம் பேட்டி

Body:தமிழகத்தில் தற்போது அரசின் சார்பில் அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது இதனால் மதுவினால் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களை சீரழித்து வருவதாகவும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் , காந்திய பேரவை இயக்கம் சார்பில் அதன் தலைவர் திரு குமரி அனந்தன் இன்று காலை காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வருகைபுரிந்து மலர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் , தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா திருக்குறளின் வழிகாட்டுதலின்படியும் ,அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்... ஆனால் தற்போது அவரின் பெயரைக் கொண்ட தமிழகத்தை ஆளும் கட்சி வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து மக்களை சீரழித்து வருகின்றனர்...கடந்த 15ஆம் தேதிக்கு முன்பே காந்திய இயக்கம் பேரவை சார்பில் தாம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தில் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய பின் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக்கோரி கோரிக்கை வைத்த நிலையில் அதை நிராகரித்தவர் அறிவிப்பு வெளியிடவில்லை ஆகையால் வருகிற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகவும் தமிழகத்தில் மதுவினால் சீரழியும் குடும்பங்களை காக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.. பல காவியங்கள் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்த போதும் தமிழகத்தை ஆளும் கட்சிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்..இன்னைக்கு சீன் போது மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜீ. வி .மதியழகன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

Conclusion:பேட்டி திரு குமரி அனந்தன்... மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் தமிழக காந்திய பேரவை தலைவர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.