ETV Bharat / state

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் உதயகுமார் - அமைச்சர் உதயகுமார்

காஞ்சிபுரம்: வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளக்கூடிய வகையில், தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி
author img

By

Published : Sep 25, 2019, 7:59 PM IST

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், ’காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய 515 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் பணியாற்றுவதற்காக முதல் நிலை பணியாளர்களுக்கு உரிய பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

அமைச்சர் பேட்டி

பேரிடர் காலங்களில் அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் 264 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் ரூ. 428 கோடியில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி துறை மூலமாக பாலங்கள், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் அமைத்தல், விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் ஒருலட்சத்து 47ஆயிரத்து 10 மணல் மூட்டைகள் மற்றும் ஒருலட்சத்து 73ஆயிரம் சவுக்கு மரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, வடகிழக்குப் பருவமழையை சமாளிப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், ’காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய 515 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் பணியாற்றுவதற்காக முதல் நிலை பணியாளர்களுக்கு உரிய பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

அமைச்சர் பேட்டி

பேரிடர் காலங்களில் அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் 264 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் ரூ. 428 கோடியில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி துறை மூலமாக பாலங்கள், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் அமைத்தல், விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் ஒருலட்சத்து 47ஆயிரத்து 10 மணல் மூட்டைகள் மற்றும் ஒருலட்சத்து 73ஆயிரம் சவுக்கு மரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, வடகிழக்குப் பருவமழையை சமாளிப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Intro:வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளக்கூடிய வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
Body:
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய 515 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பணியாற்றுவதற்காக முதல் நிலை பணியாளர்களுக்கு உரிய பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். கிராமங்களில் பணியமர்த்தப்படவுள்ள 3666 முதல்நிலை பொறுப்பாளர்களின் செல்லிடப்பேசி எண்கள் அடங்கிய புத்தகம் தயார் செய்யப்பட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 50 மண்டை குழுக்களாக பிரிக்கப்பட்டு 19 துணை ஆட்சியர் 33 தொழில்நுட்ப அலுவலர்கள் மேற்படி குழுக்களை ஒருங்கிணைத்து 8 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பேரிடர் காலங்களில் கிராமத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு உடனடி தீர்வு காணப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக கால்நடைகளுக்கான 108 முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பல்நோக்குப் பாதுகாப்பு மையங்கள், 20 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 352 நிவாரண முகாம்களாக பயன்படுத்துவதற்காக பொது மற்றும் தனியார் கட்டடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் நிவாரணப்படை, மாநில பேரிடர் நிவாரணப்படை வீரர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 264 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் 428 கோடியில் பொதுப்பணித் துறை ஊரக வளர்ச்சி துறை நெடுஞ்சாலைத் துறை பேரூராட்சி துறை மூலமாக பாலங்கள் சிறு பாலங்கள் மழைநீர் வடிகால் அமைத்தல் விரிவுபடுத்துதல் உபரி நீர் கால்வாய் நீர் வரத்து கால்வாய் ஆகியவற்றை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . 147010 மணல் மூட்டைகள் மற்றும் அதற்கு 107300 சவுக்கு மரங்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, வடகிழக்குப் பருவமழை ஏற்படும்போதும் அதை சமாளிப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்
கூட்டத்துக்கு, கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய்த்துறை ஆணையருமான சத்யகோபால் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Conclusion:கூட்டத்தில் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.