ETV Bharat / state

அத்தி வரதர் வைபவத்தைக் காண சிறப்பு ஏற்பாடு - சேவூர் ராமச்சந்திரன்

காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவத்தின் பக்தர்கள் சிறப்பாக தரிசனம் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

author img

By

Published : Jun 30, 2019, 9:52 AM IST

அத்தி வரதர் வைபவம்

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜர் திருக்கோயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி அத்தி வரதர் வைபவம் வரும் ஜூலை 1ஆம் தேதி காலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘ஆதி அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை அமைத்துள்ளனர். இதனை பயன்படுத்தி பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும், அத்திவரதர் வைபவத்தையொட்டி செய்தி விளம்பரத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி காஞ்சிபுரம் மேட்டு தெரு அருகில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

அத்தி வரதர் வைபவம்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரமேரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜர் திருக்கோயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி அத்தி வரதர் வைபவம் வரும் ஜூலை 1ஆம் தேதி காலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘ஆதி அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை அமைத்துள்ளனர். இதனை பயன்படுத்தி பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும், அத்திவரதர் வைபவத்தையொட்டி செய்தி விளம்பரத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி காஞ்சிபுரம் மேட்டு தெரு அருகில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

அத்தி வரதர் வைபவம்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரமேரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Intro:Body:
அனைத்து துறை சார்பிலும் அத்தி வரதர் வைபவத்தின் பக்தர்கள் சிறப்பாக தரிசனம் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் காஞ்சிபுரத்தில் ஆய்வுக்குப் பின் பேட்டி யளித்தார்

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற வரதராஜர் திருக்கோயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி அத்தி வரதர் வைபவம் வரும் ஜூலை 1-ஆம் தேதி காலை 5 மணிக்கு முதல் தொடங்க உள்ளது...

பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் 500 ரூபாய் மதிப்பிலான சகஸ்ரநாம அர்ச்சனை எனும் மூன்று பிரிவுகளின் கீழ் பக்தர்கள் ஆதி அத்தி வரத தரிசனம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது

மேலும் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள கிழக்கு ராஜகோபுரம் வழியாக ஆதி அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்திற்கு வரும் வழிகளில் குடிநீர் மருத்துவ வசதி சுகாதார வசதிகள் உள்ளிட்டவைகள் சிறப்பாக செய்யப்பட்டு கியூ வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர் கோடை மற்றும் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள கோயில் முழுவதும் கூறை வேயப்பட்டுள்ளது

இந்நிலையில் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் வரதராஜபெருமாள் கோயிலில் பக்தர்களின் வசதிகளை ஆய்வு மேற்கொண்டார் அதில் மேலும் சில வசதிகளை பக்தர்களுக்கு செய்து தருமாறும் அறிவுறுத்தினர் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 40 வருடங்களுக்குப் பிறகு ஆதி அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை அமைத்துள்ளனர் இதனை பயன்படுத்தி பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள லாம் என தெரிவித்தார்..

ஆய்வுக்குப்பின் அத்திவரதர் வைபவத்தையொட்டி செய்தி விளம்பரத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி காஞ்சிபுரம் மேட்டு தெரு அருகில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது இதில் 25க்கும் மேற்பட்ட அரசு துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் , நலத்திட்ட பணிகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் காட்சி விளக்கப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது..இதனை செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் அரங்குகளை திறந்து வைத்து பொதுமக்கள் பார்வையிட இலவசமாக இன்று அனுமதித்தனர்

45 நாட்கள் இந்த பொருட்காட்சி நடைபெறும் எனவும் நாள்தோறும் இளம் கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்களின் நிகழ்ச்சிகள் கலையரங்கத்தில் நடைபெறும் எனவும் சரியான தருணத்தில் இந்த பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்றும் அரசின் அனைத்து திட்டங்களையும் மக்கள் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும் அலுவலர்கள் அரங்கில் இருப்பார்கள் எனவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா பொன்னையா மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரமேரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.