ETV Bharat / state

தமிழ்நாடு தலை நிமிர கல்வி அவசியம் - ஏடிஜிபி ஷகீல் அக்தர்

author img

By

Published : Feb 8, 2020, 3:00 PM IST

செங்கல்பட்டு: மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் 6ஆவது ஆண்டு விழாவில் ஏடிஜிபி ஷகீல் அக்தர் கலந்து கொண்டு உரையாற்றியபோது தமிழ்நாடு தலை நிமிர கல்வி அவசியம் என்றார்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 6ஆவது ஆண்டு விழா
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 6ஆவது ஆண்டு விழா


செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணைப் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ஷகீல் அக்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலை நிகழ்ச்சிகளுக்கு பின்னர் மாணவர்களுக்கிடையே உரையாற்றிய ஏடிஜிபி ஷகில் அக்தர், "பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தியது பெருமைக்குரிய ஒன்றாகும். பள்ளியில் பயிலும் பருவத்திலிருந்தே அதிக அளவில் ஒழுக்கத்தைக் கடைபிடித்து முன்னோர் கூறிய எளிய முறையில் வாழ்வை பின்பற்ற வேண்டும், அப்போதுதான் வாழ்வில் பல உயரங்களை அடைய முடியும். அதுமட்டுமின்றி தமிழ்நாடு தலை நிமிர வேண்டும் என்றால் அதை கல்வியால் மட்டுமே உயர்த்த முடியும் எனவே அனைத்து துறைகளிலும் மாணவர்கள் ஈடுபாடு கொள்ளவேண்டும்" என்றார்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 6ஆவது ஆண்டு விழா

தொடர்ந்து தமிழ் கலாச்சார விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஷகில் அக்தர் பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 6ஆவது ஆண்டு விழா

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பல்வகை திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் - துணைவேந்தர் பேச்சு


செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணைப் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ஷகீல் அக்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலை நிகழ்ச்சிகளுக்கு பின்னர் மாணவர்களுக்கிடையே உரையாற்றிய ஏடிஜிபி ஷகில் அக்தர், "பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தியது பெருமைக்குரிய ஒன்றாகும். பள்ளியில் பயிலும் பருவத்திலிருந்தே அதிக அளவில் ஒழுக்கத்தைக் கடைபிடித்து முன்னோர் கூறிய எளிய முறையில் வாழ்வை பின்பற்ற வேண்டும், அப்போதுதான் வாழ்வில் பல உயரங்களை அடைய முடியும். அதுமட்டுமின்றி தமிழ்நாடு தலை நிமிர வேண்டும் என்றால் அதை கல்வியால் மட்டுமே உயர்த்த முடியும் எனவே அனைத்து துறைகளிலும் மாணவர்கள் ஈடுபாடு கொள்ளவேண்டும்" என்றார்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 6ஆவது ஆண்டு விழா

தொடர்ந்து தமிழ் கலாச்சார விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஷகில் அக்தர் பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 6ஆவது ஆண்டு விழா

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பல்வகை திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் - துணைவேந்தர் பேச்சு

Intro:செங்கல்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் ஆண்டு விழா ஏ டிஜிபி ஷகீல் அக்தர் பங்கேற்பு


Body:செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணை பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் ஆண்டு விழா நடைபெற்றது

பள்ளியில் தாளாளர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ஷகீல் அக்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாணவர்களுக்கிடையே பேசிய ஏடிஜிபி ஷகில் அக்தர் பள்ளி மாணவர்களின் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தியது பெருமைக்குரிய ஒன்றாகும் பள்ளியில் பயிலும் பருவத்திலிருந்தே அதிக அளவில் முன்னோர்களை பின்பற்ற வேண்டும் அப்போதுதான் ஒழுக்கத்தை கடைபிடிக்க முடியும். அதுமட்டுமின்றி தமிழகம் தலை நிமிர வேண்டும் என்றால் அதை கல்வியால் மட்டுமே உயர்த்த முடியும் எனவே அனைத்து துறைகளிலும் ஈடுபாடு கொண்டு தமிழகத்தை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் என கூறினார்


Conclusion:மேலும் தமிழ் கலாச்சார விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஏடிஜிபி ஷகில் அக்தர் பரிசுகளையும் நற்சான்றிதழ் இவர்களையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.