ETV Bharat / state

'இனி காலதாமதத்திற்கு நோ வே..' - நெரிசலில் சிக்காமல் சிட்டாக பறக்கும் 108

author img

By

Published : Apr 15, 2021, 7:32 PM IST

Updated : Apr 21, 2021, 11:58 AM IST

போக்குவரத்து பாதிப்பில் சிக்காமல் சாலையில் எவ்வித தங்குதடையின்றி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல ஏதுவாக, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதியதோர் கண்டுபிடிப்பை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.

ரிசலில் சிக்காமல் சிட்டாக பறக்கும் 108
ரிசலில் சிக்காமல் சிட்டாக பறக்கும் 108

கரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டுமல்லாது சாதாரண காலங்களிலும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கின்றனர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள். எங்கு, எப்போது, யார் அழைத்தாலும் அடுத்த சில நிமிடங்களில் களத்தில் நிற்கும் 108 ஆம்புலன்ஸ் வசதி, உயிரை காக்க மட்டுமல்லாது, புது உயிர் ஜனிக்கவும் அளப்பறிய சேவையாற்றுகிறது. 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கும் ஆம்புலன்ஸ், இக்கட்டான சூழலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது.

இதை சரி செய்ய புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவிகள் கீர்த்திகா, கவிதா, ஜெயஸ்ரீ ஆகியோர். இறுதி ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்களான இவர்கள், அவசரகால சேவையாக உள்ள உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் புதியதோர் படைப்பை படைக்க விரும்பி, தங்கள் துறை உதவி பேராசிரியரான ரீட்டாவை அணுகியுள்ளனர்.

தொடர்ந்து, உதவிப் பேராசியர் ரீட்டாவின் ஆலோசனையின்பேரில், வளர்ந்து வரும் தொடர் போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிப்பில் சிக்காமல் சாலையில் எவ்வித தங்கு தடையின்றி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல ஏதுவாக, புதியோர் கண்டுபிடிப்பினை படைக்க வேண்டும் என எண்ணி அதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்தில் சிக்காமல் செல்லும் 108 - பொறியியல் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

மாறும் சிக்னல்கள்.. ஆம்புலன்ஸ்க்கு வழி..

அதன் விளைவாக, தற்போது உள்ள விஞ்ஞான தொழில்நுட்பங்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வருகின்ற சாலையிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்கூட்டியே சுமார் 120 மீட்டர் முன்னதாகவே அதற்காக பொருத்தப்பட்டுள்ள ஒலி சென்சார் மூலமாக ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து வரும் அவசரக்கால ஒலியை வைத்து, ஆம்புலன்ஸ் கடக்கவிருக்கும் போக்குவரத்து சிக்னல்களின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் மூலமாக, சிவப்பு நிறத்தில் இருக்கும் சிக்னலானது பச்சை நிறத்திற்கு மாற்றப்படும்.

குறிப்பாக போக்குவரத்து ஜங்சனில் இவ்வாறு மாற்றம் செய்யும் அதே வேளையில், மற்ற மூன்று வழிச் சாலையின் சிக்னல்கள் அனைத்தும் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் எவ்வித போக்குவரத்து பாதிப்பிலும் சிக்காமல், தொடர்ந்து தங்குதடையின்றி சாலையில் பயணிக்க முடியும்.

உதவி பேராசிரியர் ரீட்டாவும் மாணவிகளும்
உதவி பேராசிரியர் ரீட்டாவும் மாணவிகளும்

சென்சார் தான் அச்சாணி

குறிப்பிட்ட போக்குவரத்து சிக்னல்களை ஆம்புலன்ஸ் கடந்த உடன் மீண்டும் பழைய நிலையில் அனைத்து சிக்னல்களும் இயங்கும் வகையில், அதற்கான போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் கொண்டு இயங்கும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது அனைத்தையும் சாத்தியமாக்குவதற்காக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திய ஒலி சென்சார் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கருவிகளும் மிக மலிவான விலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை அனைத்தும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் எனப்படும் ஐ.ஓ.டி தொழில்நுட்பத்தில் தான் இயங்கிறது.

பொருட்செலவும் இல்லை.. கால விரயமும் கிடையாது..

ஆகையால், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவதில் எவ்வித பெரிய பொருட்செலவும், காலவிரயங்களும் தேவைப்படுவதில்லை. இருக்கின்ற அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் 120 மீட்டருக்கு முன்பாகவே இதற்கான ஒலி சென்சார்களை பொருத்த வேண்டும், மற்றும் பிற தொழில்நுட்ப கருவிகளை போக்குவரத்து சிக்னல்களில் மட்டும் பொருத்தினாலே இத்திட்டம் சிறப்பாக செயல்படும் என உதவி பேராசிரியரான ரீட்டா தெரிவிக்கிறார்.

போக்குவரத்தில் சிக்காமல் செல்லும் 108
மாணவர்களின் நுட்பமான திட்டம்

மேலும், இவர்களது இந்த கண்டுபிடிப்பானது பொறியியல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் சர்வதேச இதழில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றன. அவற்றில் 30 விழுக்காடு மரணங்கள் ஆம்புலன்ஸின் காலதாமதத்தால் அரங்கேறுகிறது. இந்த கண்டுபிடிப்பை செயல்படுத்துவதன் மூலம் அவற்றை தவிர்க்கலாம்

இதையும் படிங்க: ’ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கலைஞரின் பங்களிப்பு காலத்தால் அழியாதது’ - கர்ணன் பட சர்ச்சை குறித்து உதயநிதி

கரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டுமல்லாது சாதாரண காலங்களிலும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கின்றனர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள். எங்கு, எப்போது, யார் அழைத்தாலும் அடுத்த சில நிமிடங்களில் களத்தில் நிற்கும் 108 ஆம்புலன்ஸ் வசதி, உயிரை காக்க மட்டுமல்லாது, புது உயிர் ஜனிக்கவும் அளப்பறிய சேவையாற்றுகிறது. 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கும் ஆம்புலன்ஸ், இக்கட்டான சூழலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது.

இதை சரி செய்ய புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவிகள் கீர்த்திகா, கவிதா, ஜெயஸ்ரீ ஆகியோர். இறுதி ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்களான இவர்கள், அவசரகால சேவையாக உள்ள உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் புதியதோர் படைப்பை படைக்க விரும்பி, தங்கள் துறை உதவி பேராசிரியரான ரீட்டாவை அணுகியுள்ளனர்.

தொடர்ந்து, உதவிப் பேராசியர் ரீட்டாவின் ஆலோசனையின்பேரில், வளர்ந்து வரும் தொடர் போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிப்பில் சிக்காமல் சாலையில் எவ்வித தங்கு தடையின்றி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல ஏதுவாக, புதியோர் கண்டுபிடிப்பினை படைக்க வேண்டும் என எண்ணி அதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்தில் சிக்காமல் செல்லும் 108 - பொறியியல் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

மாறும் சிக்னல்கள்.. ஆம்புலன்ஸ்க்கு வழி..

அதன் விளைவாக, தற்போது உள்ள விஞ்ஞான தொழில்நுட்பங்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வருகின்ற சாலையிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்கூட்டியே சுமார் 120 மீட்டர் முன்னதாகவே அதற்காக பொருத்தப்பட்டுள்ள ஒலி சென்சார் மூலமாக ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து வரும் அவசரக்கால ஒலியை வைத்து, ஆம்புலன்ஸ் கடக்கவிருக்கும் போக்குவரத்து சிக்னல்களின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் மூலமாக, சிவப்பு நிறத்தில் இருக்கும் சிக்னலானது பச்சை நிறத்திற்கு மாற்றப்படும்.

குறிப்பாக போக்குவரத்து ஜங்சனில் இவ்வாறு மாற்றம் செய்யும் அதே வேளையில், மற்ற மூன்று வழிச் சாலையின் சிக்னல்கள் அனைத்தும் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் எவ்வித போக்குவரத்து பாதிப்பிலும் சிக்காமல், தொடர்ந்து தங்குதடையின்றி சாலையில் பயணிக்க முடியும்.

உதவி பேராசிரியர் ரீட்டாவும் மாணவிகளும்
உதவி பேராசிரியர் ரீட்டாவும் மாணவிகளும்

சென்சார் தான் அச்சாணி

குறிப்பிட்ட போக்குவரத்து சிக்னல்களை ஆம்புலன்ஸ் கடந்த உடன் மீண்டும் பழைய நிலையில் அனைத்து சிக்னல்களும் இயங்கும் வகையில், அதற்கான போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் கொண்டு இயங்கும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது அனைத்தையும் சாத்தியமாக்குவதற்காக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திய ஒலி சென்சார் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கருவிகளும் மிக மலிவான விலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை அனைத்தும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் எனப்படும் ஐ.ஓ.டி தொழில்நுட்பத்தில் தான் இயங்கிறது.

பொருட்செலவும் இல்லை.. கால விரயமும் கிடையாது..

ஆகையால், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவதில் எவ்வித பெரிய பொருட்செலவும், காலவிரயங்களும் தேவைப்படுவதில்லை. இருக்கின்ற அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் 120 மீட்டருக்கு முன்பாகவே இதற்கான ஒலி சென்சார்களை பொருத்த வேண்டும், மற்றும் பிற தொழில்நுட்ப கருவிகளை போக்குவரத்து சிக்னல்களில் மட்டும் பொருத்தினாலே இத்திட்டம் சிறப்பாக செயல்படும் என உதவி பேராசிரியரான ரீட்டா தெரிவிக்கிறார்.

போக்குவரத்தில் சிக்காமல் செல்லும் 108
மாணவர்களின் நுட்பமான திட்டம்

மேலும், இவர்களது இந்த கண்டுபிடிப்பானது பொறியியல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் சர்வதேச இதழில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றன. அவற்றில் 30 விழுக்காடு மரணங்கள் ஆம்புலன்ஸின் காலதாமதத்தால் அரங்கேறுகிறது. இந்த கண்டுபிடிப்பை செயல்படுத்துவதன் மூலம் அவற்றை தவிர்க்கலாம்

இதையும் படிங்க: ’ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கலைஞரின் பங்களிப்பு காலத்தால் அழியாதது’ - கர்ணன் பட சர்ச்சை குறித்து உதயநிதி

Last Updated : Apr 21, 2021, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.