ETV Bharat / state

சீனாக்காரன் மருத்துவமனை: மாமல்லபுரம் அருகே சீன பிரதமர் திறந்த மருத்துவமனை

author img

By

Published : Oct 10, 2019, 10:47 PM IST

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் அருகே 63 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவ மையத்தை சீன பிரதமர் சூ என்லாய் திறந்து வைத்துள்ளார்.

china PM

சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 11ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 63 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1956ஆம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகே 9 கி.மீ. தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் என்னும் கிராமத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.

மகப்பேறு குழந்தைகள் நல மையம்
மகப்பேறு குழந்தைகள் நல மையம்

இதுகுறித்து குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், "கடந்த 1956ம் ஆண்டு சீன பிரதமர் சூ என்லாய் இங்கு வந்தபோது இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். சமீபத்தில்தான் இந்த மருத்துவமனையை புனரமைத்தனர். அப்போது சீன பிரதமர் அளித்த பட்டயத்தை தொலைத்து விட்டார்கள். அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. 1954ஆம் ஆண்டு இந்த கிராமம் 'நேரு விருது' பெற்றுள்ளது.

சீன பிரதமர் சூ என்லாய்
சீன பிரதமர் சூ என்லாய்

அச்சமயத்தில் ஏராளமானோர் வருகை புரிந்தனர். சீன பிரதமர் தவிர்த்து அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங், காமன்வெல்த் பொதுச்செயலாளர் ஹோவார்ட்டி எவ்வில்லே போன்ற ஏராளமான வெளிநாட்டினரும் இக்கிராமத்திற்கு வந்துள்ளார்கள். நாட்டிலேயே முதல்முறையாக இந்த கிராமத்தில்தான் குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டத்தில் கூரைகள் மாற்றப்பட்டு, ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் உள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக மிகவும் அவதிப்பட்டனர்.

சீன பிரதமரால் திறக்கப்பட்ட மருத்துவமனை!

பின்னர், அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த வீரராகவாச்சாரி 1954ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடந்த விழாவில், அப்போதைய பிரதமர் நேருவிடம் இருந்து விருதும், ஆயிரம் ரூபாய் சன்மானமும் பெற்றார். அந்த சன்மானத் தொகையை கொண்டும், தனது சொத்தின் ஒரு பகுதியை விற்றும் இப்பகுதி கிராம மக்களுக்கு மருத்துவமனை கட்டினார். அதனை சீன பிரதமர் சூ என்லாய் திறந்து வைக்க வேண்டுமென்று அலுவலர்கள் பலர் வீரராகவாச்சாரியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனை தொடர்ந்து சென்னை வந்த சீன பிரதமர் சூ என்லாயிடம் வீரராகவாச்சாரி கேட்டுக் கொண்டதற்கிணங்க 3 அறைகள் கொண்ட பிரசவ ஆஸ்பத்திரியை, 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திறந்து வைத்தார். கடந்த 63 ஆண்டுகளில் 6 லட்சம் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனை மட்டும் 'சீனாக்காரன் மருத்துவமனை' என்று அழைக்கப்பட்டது. தற்போது அந்த மருத்துவமனை உலர்ந்த நிலையில் இருந்ததால் அதனை புதுப்பித்து கட்டியுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: சீனத் தலைவர்களும்... சென்னை பயணங்களும்...!

சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 11ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 63 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1956ஆம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகே 9 கி.மீ. தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் என்னும் கிராமத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.

மகப்பேறு குழந்தைகள் நல மையம்
மகப்பேறு குழந்தைகள் நல மையம்

இதுகுறித்து குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், "கடந்த 1956ம் ஆண்டு சீன பிரதமர் சூ என்லாய் இங்கு வந்தபோது இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். சமீபத்தில்தான் இந்த மருத்துவமனையை புனரமைத்தனர். அப்போது சீன பிரதமர் அளித்த பட்டயத்தை தொலைத்து விட்டார்கள். அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. 1954ஆம் ஆண்டு இந்த கிராமம் 'நேரு விருது' பெற்றுள்ளது.

சீன பிரதமர் சூ என்லாய்
சீன பிரதமர் சூ என்லாய்

அச்சமயத்தில் ஏராளமானோர் வருகை புரிந்தனர். சீன பிரதமர் தவிர்த்து அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங், காமன்வெல்த் பொதுச்செயலாளர் ஹோவார்ட்டி எவ்வில்லே போன்ற ஏராளமான வெளிநாட்டினரும் இக்கிராமத்திற்கு வந்துள்ளார்கள். நாட்டிலேயே முதல்முறையாக இந்த கிராமத்தில்தான் குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டத்தில் கூரைகள் மாற்றப்பட்டு, ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் உள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக மிகவும் அவதிப்பட்டனர்.

சீன பிரதமரால் திறக்கப்பட்ட மருத்துவமனை!

பின்னர், அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த வீரராகவாச்சாரி 1954ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடந்த விழாவில், அப்போதைய பிரதமர் நேருவிடம் இருந்து விருதும், ஆயிரம் ரூபாய் சன்மானமும் பெற்றார். அந்த சன்மானத் தொகையை கொண்டும், தனது சொத்தின் ஒரு பகுதியை விற்றும் இப்பகுதி கிராம மக்களுக்கு மருத்துவமனை கட்டினார். அதனை சீன பிரதமர் சூ என்லாய் திறந்து வைக்க வேண்டுமென்று அலுவலர்கள் பலர் வீரராகவாச்சாரியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனை தொடர்ந்து சென்னை வந்த சீன பிரதமர் சூ என்லாயிடம் வீரராகவாச்சாரி கேட்டுக் கொண்டதற்கிணங்க 3 அறைகள் கொண்ட பிரசவ ஆஸ்பத்திரியை, 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திறந்து வைத்தார். கடந்த 63 ஆண்டுகளில் 6 லட்சம் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனை மட்டும் 'சீனாக்காரன் மருத்துவமனை' என்று அழைக்கப்பட்டது. தற்போது அந்த மருத்துவமனை உலர்ந்த நிலையில் இருந்ததால் அதனை புதுப்பித்து கட்டியுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: சீனத் தலைவர்களும்... சென்னை பயணங்களும்...!

Intro:மாமல்லபுரம் அருகே 63 ஆண்டுகளுக்கு முன்பே மகப்பேறு குழந்தைகள் நல மையத்தை திறந்து வைத்த சீனாவின் முதல் பிரதமர் சூஎன்லாய்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே குழிப்பாந் தண்டலம் என்கின்ற கிராமத்தில் 63 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் முதல் பிரதமர் சூஎன்லாய் மகப்பேறு மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார் அந்த நல்லுறவை ஞாபகப் படுத்தும் விதமாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ஆம் தேதி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் மூன்று நாட்கள் தங்கி அதிகாரப்பூர்வமற்ற பேச்சில் நடந்த உள்ளார்கள் ஆனால் கடந்த 63 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த சீனாவின் முதல் பிரதமர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆயிரத்து 956 ஆம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த சீனாவின் முதல் பிரதமர் சூஎன்லாய் மாமல்லபுரம் அருகே 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் என்னும் கிராமத்தில் மகப்பேறு குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பி தல சயனம் என்பவர் கூறுகையில் கடந்த 1956ம் ஆண்டு சீனாவின் முதல் பிரதமர்சூஎன்லாய் இங்கு வந்து மகப்பேறு குழந்தைகள் மருத்துவமனையை திறந்து வைத்தார் சமீபத்தில் தான் இந்த மருத்துவமனை புனரமைக்கும் அப்போது சீன பிரதமரை இங்கே அளித்த பட்டயத்தை தொலைத்து விட்டார்கள் அதை வரலாற்று முக்கியத்துவம் அவர்களுக்கே தெரியவில்லை கடந்த 1954ம் ஆண்டு இந்த கிராமம் மாதிரி கிராமங்களாக நேரு விருது பெற்றுள்ளது அந்த நேரத்தில் ஏராளமான விஐபிகள் இந்த கிராமத்திற்கு வந்தார் கள் சீன பிரதமர் தவிர்த்து அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் காமன்வெல்த் பொதுச்செயலாளர் ஹோவார்ட்டிஎவ்வில்லே போன்ற ஏராளமான வெளிநாட்டு பயணிகள் இந்த கிராமத்திற்கு வந்துள்ளார்கள் ஆனால் இந்த கிராமத்தை மறந்துவிட்டார்கள் என வேதனையுடன் தெரிவித்தார் நமது நாட்டின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குழிப்பாந் தண்டலம் கிராமத்தில் ஏராளமான பணிகள் செயல்பட்டன நாட்டிலேயே முதல் முறையாக இந்த கிராமத்தில்தான் குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டத்தில் கூரைகள் மாற்றப்பட்டு ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக மிகவும் அவதி பட்டதாக அதை அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவராக இருந்த வீரராகவப் சாரி 1954 ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடந்த விழாவில் அப்போதைய பிரதமர் நேரு வீரராகவர் சாரி அவர்களுக்கு விருது ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கி கௌரவித்தார் அந்த சன்மானம் தொகையை கொண்டு தனது சொத்தின் ஒரு பகுதியை விற்று இந்த பகுதி கிராம மக்களுக்கு மருத்துவ மனை கட்டியதாகவும் அதனை சீன அதிபர்சூஎன்லாய் திறந்து வைக்க வேண்டுமெனவும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் அதனை தொடர்ந்து சென்னை வந்த சீன அதிபர்சூஎன்லாய் வீரராகவப் சாரின் வேண்டுகோளுக்கிணங்க 3 அறைகள் கொண்ட பிரசவ ஆஸ்பத்திரி சீன பிரதமர்சூஎன்லாய் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி திறந்து வைத்தார் கடந்த 63 ஆண்டுகளில் 6 லட்சம் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது ஆனால் இந்த மருத்துவமனை மட்டும் சீனாக்காரன் மருத்துவமனை என்று அழைக்கப்பட்டது தற்போது அந்த மருத்துவமனை உலர்ந்த நிலையில் இருந்ததால் அதனை புதுப்பித்து கட்டி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


Conclusion:அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் திருவிழா ஊராட்சி மன்ற தலைவராக பணியில் இருந்த வரை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்து கொடுத்ததாகவும் குறிப்பாக பள்ளிக்கூடங்கள் ரேடியோ ஸ்டேஷன் போன்ற பல நலத்திட்ட உதவிகளை வீரராகவ சதி செய்ததாகவும் அவர் செய்த இந்த பணிகளால் மக்கள் பெரிதும் பயன் அடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் தற்போது வரையிலும் அவர் செய்த உதவிக்காக நன்றிக்கடன் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.