கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலத்திலிருந்து வந்த காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த அனிதா என்பவரும், இருசக்கர வாகனத்தில் வந்த முனியன் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், விபத்தில் காயமடைந்த நான்கு பேரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதில் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இரு குழந்தைகள் கவலைக்கிடம்