ETV Bharat / state

கள்ளக்குறிச்சி அருகே வாடகை பாத்திர கடை உரிமையாளர் வெட்டிக்கொலை - சாலைமறியல்

கள்ளக்குறிச்சி அருகே வாடகை பாத்திரக் கடை உரிமையாளரை வீடு புகுந்து வெடி கொலை செய்த செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

author img

By

Published : May 28, 2022, 9:23 AM IST

கள்ளக்குறிச்சி: சமையல் சப்ளையர்ஸ் கடை உரிமையாளரை வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை.
கள்ளக்குறிச்சி: சமையல் சப்ளையர்ஸ் கடை உரிமையாளரை வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை.

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அடுத்த புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கடந்த பத்து வருடமாக கொங்குராயபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாடகை பாத்திரக் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீடு திரும்பிய நாராயணசாமி வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து நாராயணசாமியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், நாராயணசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ராஜலட்சுமி, திரிமேனி, பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கொலை நடைபெற்ற இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நாராயணசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி வேப்பூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் புது உச்சிமேட்டை சேர்ந்த ராமு என்பவர் நாராயணசாமி நடத்தி வந்த வாடகை பாத்திர கடைக்கு எதிரே இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் நாராயணசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாய் கண் முன்னே மகன் அடித்து கொலை - தாய்மாமன் கைது

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அடுத்த புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கடந்த பத்து வருடமாக கொங்குராயபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாடகை பாத்திரக் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீடு திரும்பிய நாராயணசாமி வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து நாராயணசாமியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், நாராயணசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ராஜலட்சுமி, திரிமேனி, பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கொலை நடைபெற்ற இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நாராயணசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி வேப்பூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் புது உச்சிமேட்டை சேர்ந்த ராமு என்பவர் நாராயணசாமி நடத்தி வந்த வாடகை பாத்திர கடைக்கு எதிரே இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் நாராயணசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாய் கண் முன்னே மகன் அடித்து கொலை - தாய்மாமன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.