ETV Bharat / state

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போக்சோவில் கைது!

author img

By

Published : Jun 20, 2021, 9:38 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே மிமிக்ரி கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையை அடுத்த எறையூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராஜசேகர். இவர் தனது தெருவில் உள்ள சிறுமிகளுக்கு, மிமிக்ரி செய்து காட்டுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (ஜூன்.20) பதிமூன்று வயது சிறுமிக்கு, மிமிக்ரி கற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ராஜசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராஜசேகர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : ’அவசரத்துல யூனிபார்ம் மறந்துட்டேன்’..; காவலரின் தர்பூசணி திருட்டு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையை அடுத்த எறையூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராஜசேகர். இவர் தனது தெருவில் உள்ள சிறுமிகளுக்கு, மிமிக்ரி செய்து காட்டுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (ஜூன்.20) பதிமூன்று வயது சிறுமிக்கு, மிமிக்ரி கற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ராஜசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராஜசேகர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : ’அவசரத்துல யூனிபார்ம் மறந்துட்டேன்’..; காவலரின் தர்பூசணி திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.