ETV Bharat / state

வீட்டில் கள்ளச் சாராயம் விற்பனை - ஒருவர் கைது!

author img

By

Published : Jun 7, 2021, 3:34 PM IST

உளுந்தூர்பேட்டையில் நூதன முறையில் வீட்டிலேயே யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

வீட்டில் கள்ளச் சாராயம் - ஒருவர் கைது
வீட்டில் கள்ளச் சாராயம் - ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தெரு முழுவதுமே சாராய வாடை வீசிய நிலையில், வீடு வீடாக சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏழுமலை (40) என்பவர் செல்போனில் யூடியூப் பார்த்துக்கொண்டே வீட்டில் நூதன முறையில் சாராயம் காய்ச்சி கொண்டிப்பது கண்டறிப்பட்டது. இதனைக் கண்ட காவல்துறையினர் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து, சாராயம் வடிக்க பயன்படுத்திய செல்போன், குக்கர், கேஸ், ஸ்டவ் அடுப்பு உள்ளிட்டவை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கறுப்புப் பூஞ்சை தொற்று - மருந்துகள் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தெரு முழுவதுமே சாராய வாடை வீசிய நிலையில், வீடு வீடாக சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏழுமலை (40) என்பவர் செல்போனில் யூடியூப் பார்த்துக்கொண்டே வீட்டில் நூதன முறையில் சாராயம் காய்ச்சி கொண்டிப்பது கண்டறிப்பட்டது. இதனைக் கண்ட காவல்துறையினர் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து, சாராயம் வடிக்க பயன்படுத்திய செல்போன், குக்கர், கேஸ், ஸ்டவ் அடுப்பு உள்ளிட்டவை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கறுப்புப் பூஞ்சை தொற்று - மருந்துகள் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.