கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கல்வராயன் மலைப் பகுதியில் நேற்று (டிச.16) முழுவதும் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் பாதுகாப்பு கருதி புதிய அணைக்கட்டின் வழியாக வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மணிமுத்தாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனைத்தொடர்ந்து ஆட்சியர் கிரண்குராலா அணையை நேரில் ஆய்வு செய்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அனையிலிருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் மணிமுத்தாறு அணையை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்