ETV Bharat / state

மூன்றாம் கலைஞரே தேர்தல் தேதி கூட தெரியாதா? - வறுத்தெடுத்த வலைதளவாசிகள்! - திமுக

ஈரோடு: பரப்புரையின்போது தேர்தல் தேதியை உதயநிதி ஸ்டாலின் பேப்பர் பார்த்து படித்ததை சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Mar 28, 2019, 10:12 AM IST

Updated : Mar 28, 2019, 10:41 AM IST

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரையை வேகப்படுத்தியுள்ளன. அந்த வகையில், திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஒவ்வொரு முறையும் பேப்பரில் எழுதி வைத்திருந்ததை பார்த்து பார்த்து படித்தார். அதன் உச்சக்கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடக்க இருக்கும் தேதியான ஏப்ரல் 18ஆம் தேதியையும் அவர் கையில் வைத்திருந்த பேப்பரை பார்த்து படித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

தற்போது உதயநிதியின் இந்த பரப்புரை வீடியோவை சமூக வலைதளவாசிகள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மூன்றாம் கலைஞர் என திமுகவினரால் பட்டம் பெற்றிருப்பவருக்கு தேர்தல் தேதி கூடவா தெரியாது என பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக கள்ளக்குறிச்சி தேர்தல் பரப்புரையின்போது, “2004ஆம் ஆண்டு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது” என உதயநிதி பேசியதும் அதனை வலைதளவாசிகள் கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரையை வேகப்படுத்தியுள்ளன. அந்த வகையில், திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஒவ்வொரு முறையும் பேப்பரில் எழுதி வைத்திருந்ததை பார்த்து பார்த்து படித்தார். அதன் உச்சக்கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடக்க இருக்கும் தேதியான ஏப்ரல் 18ஆம் தேதியையும் அவர் கையில் வைத்திருந்த பேப்பரை பார்த்து படித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

தற்போது உதயநிதியின் இந்த பரப்புரை வீடியோவை சமூக வலைதளவாசிகள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மூன்றாம் கலைஞர் என திமுகவினரால் பட்டம் பெற்றிருப்பவருக்கு தேர்தல் தேதி கூடவா தெரியாது என பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக கள்ளக்குறிச்சி தேர்தல் பரப்புரையின்போது, “2004ஆம் ஆண்டு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது” என உதயநிதி பேசியதும் அதனை வலைதளவாசிகள் கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.


டி.சாம்ராஜ்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
28.03.2019


28.03.2019 ERD SATHY 02_28_ UTHYANITHI _VIS_TN10009
(VISUAL FTP இல் உள்ளது)

எழுதி வைத்ததை பார்த்து பார்த்து படித்த உதய நிதி ஸ்டாலின்
தேர்தல் தேதியைகூட  பார்த்து தேர்தல் 18 என கூறிய உதயநிதி ஸ்டாலின்


ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நீலகிரி மக்களைத் தொகுதி  திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது ஒவ்வொரு முறையும் தனிப்பேப்பரில் எழுதி வைத்திருந்தை பார்த்து பார்த்து படித்தார்.  பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது. பிரதமர் மோடி அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவதற்கு பதிலாக மக்களுக்கு பட்டை நாமம் போட்டார். பயங்கரவாதத்தை ஒழித்தாரா. புல்வாமா தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். பணமதிப்பிழப்பு செய்து கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார். ஆனால் மக்களை வங்கியில் நீண்ட வரிசையில் நிற்க வைத்தார். மூன்று மாத காலமாக பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. திமுக தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, விவசாயக் கடன் ரத்து, இலவச ரயில் பாஸ், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்கு 150 நாட்களுக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதால் இந்த தேர்தலில் கதாநாயகனாக தேர்தல் அறிக்கை உள்ளது‌. இந்தியாவிற்கு வில்லன் மோடி இபிஎஸ் ஓபிஎஸ் மோடியின் கைக்கூலிகள். தமிழக அரசின் சாதனை இரண்டாண்டு சாதனை இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் போராட்டங்கள் நடத்தியது. பெண்களுக்கு இந்த ஆட்சி யில் பாதுகாப்பில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு அதை தற்கொலை என வழக்கை முடித்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பெற்றபோது ஏற்பட்ட மரணம் சிகிச்சையில் சந்தேகம் உள்ளது. இது குறித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

-28.03.2019 ERD SATHY 02_28_ UTHYANITHI _VIS_TN10009
Last Updated : Mar 28, 2019, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.