ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் தம்பதியிடம் 7 சவரன் நகை திருட்டு: இருவர் கைது!

ஈரோடு: சத்தியமங்கலத்திற்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்த தம்பதியிடம் 7 சவரன் தங்க தாலிக் கொடியை திருடிச் சென்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Oct 3, 2020, 2:39 PM IST

கைது செய்யப்பட்ட இருவர்
கைது செய்யப்பட்ட இருவர்

சேலம் மாவட்டம் பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் இன்று (அக். 3) அதிகாலை தனது மனைவியுடன் சேலத்திலிருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இருவரும் தங்களுடன் நான்கு கைப்பைகளைக் கொண்டு வந்துள்ளனர்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலத்திற்குச் செல்வதற்கு தயாரானபோது அவர்கள் கொண்டுவந்த கைப்பையிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 சவரன் தங்கத் தாலிக் கொடி, தங்கக் காசுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அதே பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் புகார் தெரிவித்த சுகுமார், தங்களுடன் சேலத்திலிருந்து வந்த இருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த பாபு, ரவி என்பது தெரியவந்தது. சேலத்திலிருந்து தம்பதியை பின்தொடர்ந்து வந்த இருவர், தம்பதி தூங்கியதற்குப் பிறகு அவர்களது கைப்பையிலிருந்த தங்க தாலிக் கொடியை லாவமாக எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் இதேபோல் இரவு நேரத்தில் பேருந்துகளில் பயணம் செய்தபடி முதியவர்கள் உள்ளிட்டவர்களிடம் பணம், நகைகளை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி- திருடனுக்கு தர்ம அடி!

சேலம் மாவட்டம் பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் இன்று (அக். 3) அதிகாலை தனது மனைவியுடன் சேலத்திலிருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இருவரும் தங்களுடன் நான்கு கைப்பைகளைக் கொண்டு வந்துள்ளனர்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலத்திற்குச் செல்வதற்கு தயாரானபோது அவர்கள் கொண்டுவந்த கைப்பையிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 சவரன் தங்கத் தாலிக் கொடி, தங்கக் காசுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அதே பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் புகார் தெரிவித்த சுகுமார், தங்களுடன் சேலத்திலிருந்து வந்த இருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த பாபு, ரவி என்பது தெரியவந்தது. சேலத்திலிருந்து தம்பதியை பின்தொடர்ந்து வந்த இருவர், தம்பதி தூங்கியதற்குப் பிறகு அவர்களது கைப்பையிலிருந்த தங்க தாலிக் கொடியை லாவமாக எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் இதேபோல் இரவு நேரத்தில் பேருந்துகளில் பயணம் செய்தபடி முதியவர்கள் உள்ளிட்டவர்களிடம் பணம், நகைகளை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி- திருடனுக்கு தர்ம அடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.