ETV Bharat / state

'ஃபேஸ்புக், அமேசான் போன்ற புதிய தொழில்நுட்பங்களை நமது மாணவர்கள் உருவாக்க வேண்டும்'

author img

By

Published : Feb 23, 2020, 6:30 PM IST

ஈரோடு: அமெரிக்காவினர் உருவாக்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப், அமேசான், டெஸ்லா போன்று நமது மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என டிவிஎஸ் தலைவர் வேணுகோபால் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் தலைவர் வேணு கோபால் பேச்சு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரி 21வது பட்டமளிப்பு விழா டிவிஎஸ் தலைவர் வேணு கோபால் TVS CEO Venu Gopal TVS CEO Venu Gopal Speech 21st Graduation Ceremony of Sathyamangalam Pannari Amman College
TVS CEO Venu Gopal Speech

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் 21ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரித் தலைவர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில், பொறியியல் இளங்கலை, முதுகலை, ஆராய்சி படிப்புகளுக்கான பட்டங்களை தொழிலதிபர் வேணுகோபால் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், "அமெரிக்கா உருவாக்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், அமேசான், டெஸ்லா, ஊபர் போன்ற தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்திவருகிறோம். இதனால்தான் அமெரிக்கா வல்லரசாக உள்ளது.

இதுபோன்ற புதிய தொழில்நுட்பத்தை நம் இந்திய மாணவர்கள் உருவாக்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. கல்விக்கு எல்லையில்லாத நிலையில் மாறிவரும் தற்காலத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பட்டம் படிக்கும் மாணவர்கள் சமுதாய சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

மேடையில் பேசும் டிவிஎஸ் தலைவர் வேணுகோபால்

சமுதாயத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த மாணவர்கள், படிப்பிற்குப் பின் பிறருக்கு உதவ வேண்டும். பர்கூர் போன்ற மலைக்கிராமங்களில் ஒற்றையடி பாதையில் வாழ்ந்துவருகின்றனர். அவர்களை முன்னேற்றும் பாதையில் நாம் உதவ வேண்டும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து தொழிலதிபர் வனிதா மோகன் பேசுகையில், "சீனாவில் 10 நாள்களில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பெரிய தற்காலிக மருத்துவமனை அமைத்தனர். அதுபோல், நமது மாணவர்கள் புதிய தொழில்நுட்ப ஆராய்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:' சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் 21ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரித் தலைவர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில், பொறியியல் இளங்கலை, முதுகலை, ஆராய்சி படிப்புகளுக்கான பட்டங்களை தொழிலதிபர் வேணுகோபால் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், "அமெரிக்கா உருவாக்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், அமேசான், டெஸ்லா, ஊபர் போன்ற தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்திவருகிறோம். இதனால்தான் அமெரிக்கா வல்லரசாக உள்ளது.

இதுபோன்ற புதிய தொழில்நுட்பத்தை நம் இந்திய மாணவர்கள் உருவாக்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. கல்விக்கு எல்லையில்லாத நிலையில் மாறிவரும் தற்காலத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பட்டம் படிக்கும் மாணவர்கள் சமுதாய சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

மேடையில் பேசும் டிவிஎஸ் தலைவர் வேணுகோபால்

சமுதாயத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த மாணவர்கள், படிப்பிற்குப் பின் பிறருக்கு உதவ வேண்டும். பர்கூர் போன்ற மலைக்கிராமங்களில் ஒற்றையடி பாதையில் வாழ்ந்துவருகின்றனர். அவர்களை முன்னேற்றும் பாதையில் நாம் உதவ வேண்டும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து தொழிலதிபர் வனிதா மோகன் பேசுகையில், "சீனாவில் 10 நாள்களில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பெரிய தற்காலிக மருத்துவமனை அமைத்தனர். அதுபோல், நமது மாணவர்கள் புதிய தொழில்நுட்ப ஆராய்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:' சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.